Friday, March 28, 2014

தனிமங்களின் சித்து

Photo: நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்களைப் பற்றி பார்ப்போமா ?
வைட்டமின் ஏ
உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இதன் குறைபாடு மாலைக்கண் நோயை உருவாக்கும். இது மீன் எண்ணெய், வெண்ணெய், க்ரீம், கேரட், மக்காச் சோளம் போன்ற உணவுப் பொருள்களில் காணப்படுகிறது. 
வைட்டமின் பி1
இது வளர்ச்சி, பசியைத் தூண்டுதல், நரம்பு மண்டலத்தின் சீரான பணி போன்றவற்றிற்கு அவசியமாகும். இது உலர்ந்த ஈஸ்ட், முழு தானியங்கள், தானியங்களின் தவிடு, மஞ்சள் கரு, பால் போன்ற உணவுப் பொருள்களில் கிடைக்கிறது.
வைட்டமின் பி2
பால், ஈஸ்ட், கல்லீரல் போன்ற உணவுப் பொருள்களில் காணப்படும் இதன் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்கள் சிகப்பாகக் காணப்படும், நாக்கு, வாயில் புண் ஏற்படும். வைட்டமின் பி யிலேயே இன்னும் நிறைய வைட்டமின் 6..... 12 போன்ற வேறுபட்ட சக்திகள் உள்ளன. 
வைட்டமின் சி
இதன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். செல்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற பொருள்களில் காணப்படுகிறது.
வைட்டமின் டி
இதன் குறைபாடு உள்ளவர்களுக்கு ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படும் மேலும் பற்கள் சிதைதல், எலும்புகள் பலமிழந்து போதல் போன்ற துன்பங்கள் ஏற்படும். பால், மீன் எண்ணெய், கலலீரல், முட்டை போன்ற உணவுப் பொருள்களில் கிடைத்தாலும் சூரிய ஒளியில்தான் இது போதுமான அளவு கிடைக்கும். இதன் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
வைட்டமின் கே
இது கோதுமையில் அதிகம் கிடைக்கிறது. மேலும் பச்சை காய்கறிகள்,முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றில் அதிகம் உள்ளது. குழந்தை பாக்கியம், இயல்பான கருத்தரிப்புக்கு உதவுகிறது.
இதைப் போன்று நிறைய வைட்டமின்கள் நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்கு கிடைக்கின்றன. நமக்கு சக்தியளிப்பதோடு, நோய் வராமல் தடுக்கின்றன. ஆனால் நமக்கு விரைவாக சக்தியளிப்பவை கார்போஹைட்ரேட்டுகள் தான்.
அதாவது கார்பன், ஹைட்ரஜன்,. ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் கொண்ட கரிமச் சேர்மங்களை கார்போ ஹைட்ரேட்டுகள் என்பர். இவை முழுவதுமாக ஆக்சிகரணமடைவதால் சிறந்த சக்தியளிக்கும் பொருள்களாக உள்ளன.
இரண்டாவதாக சிறந்த சக்தியளிக்கும் பொருளாகக் கொழுப்பு உள்ளது. இது உடலில் ஆங்காங்கே சேமிக்கப் பட்டிருக்கும். தேவைப்படும் நேரத்தில் சக்தியை மெதுவாகக் கொடுக்கும். எனினும் இது நமக்கு அதிகம் தேவைப்படாத ஒரு பொருளேயாகும். அடுத்தபடியாகப் புரதங்களைச் சொல்லலாம். இவை முழுவதுமாக ஆக்சிகரணம் அடைவதில்லை. எனவே பூரண சக்தி கிடைப்பதில்லை. எனவே கார்போஹைட்ரேட்டுகளே முன்னிலை வகிக்கிறது. இதற்கு எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு, தேன், குளுக்கோஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். உடல் சோர்வாக இருக்கும் போது இவற்றை சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும். தெம்பு பிறக்கும்.
உணவுப் பொருள்களில் இருந்து பெறப்படும் சக்தியை குறிக்கும் அலகிற்கு கலோரி என்று பெயர். இதை  c என்ற எழுத்தால் குறிப்பிடுவர். நமக்கு தேவையில்லாத கொழுப்பு இல்லாமல் அதிக கலோரி கிடைக்கும் உணவுப் பொருள்கள் தேனும், கரும்பும்தான். சுமார் 100கிராம்தேனில் மாவுச்சத்து 80 கிராமும், புரோட்டின்0.3 கிராமும் உள்ளது. கொழுப்பு துளிகூட இல்லை. இதன் மொத்த கலோரி 319cஆகும். இதேபோல 100கரும்புச்சாறில் 99கிராம் மாவுச் சத்தும் 1 கிராம் புரோட்டினும் உள்ளது.இதன் கலோரி 400c ஆகும். உயிரியல் துறை மேலே சொல்லப்பட்டுள்ள தனிமங்கள், சக்திகளைப் பற்றிதான் அதிகம் சொல்கிறது. ஆனால் இவற்றின் இயக்க ஆற்றல் மிகக் குறைவு. இவைகளால் அதிக சக்தி நமக்கு கிடைக்காவிட்டாலும், சில நோய்கள் வராமல் தடுக்க இவைகள் நமக்கு அவசியமாகும்.
சரி, ஆனால் இவற்றின் இயக்காற்றல் குறைவாக உள்ளதே, இயக்க ஆற்றல் உள்ள தனிமங்களைப் பெறுவது எவ்வாறு ? இந்த பகுதியில்தான் சித்தர்களின் ஆளுமை நமக்குத் தெரிய வருகிறது. அவர்களுக்கு தெரியாத எந்த விஷயங்களும் இல்லை. அதிக இயக்க ஆற்றலை மனிதர்கள் பெறுவதற்கு தங்கபஸ்பத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். எல்லோரும் தங்க பஸ்பம் சாப்பிட முடியுமா என்று நீங்கள் கேட்டால், அதற்கும் அவர்கள் வழி சொல்லியிருக்கிறார்கள். தங்கச்சத்து அதிகம் உள்ள உணவு கரிசலாங்கன்னி கீரை, ஒற்றைச் செம்பருத்திப்பூ, பொன்னாங்கன்னிக் கீரை, கல்தாமரை, சிவனார் வேம்பு, பிரம்மத் தண்டு போன்ற மூலிகைகளாகும். இவற்றை உணவில் சேர்த்து வந்தால் இயக்க ஆற்றலை அதிகம் பெறலாம். மேலும் முட்டைக் கோஸ், மாம்பழம் போன்றவற்றில் வெள்ளிச்சத்தும், தேன், கல்லீரல், முருங்கைகீரை, சிறுகீரையில் இரும்புச் சத்தும் மிகுதியாகக் கிடைக்கும் என்று சொன்னதும் நம் சித்தர் பெருமக்களே. எனவே இயக்க ஆற்றல் அதிகம் உள்ள உணவைச் சேர்த்து உண்பதால் நம் உடல் அதிக சுறுசுற்ப்பைப் பெறும். இந்த உணவுகளில் இருந்து சக்திகளை நம் உடல் எப்படிப் பெறுகிறது ? 
எந்த உணவும் இரப்பைக்குத்தான் சொல்லும். அங்கு சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், முன் சிறு குடலில் சுரக்கும் கணைய நீர், கல்லீரலில் சுரக்கும் கல்லீரல் நீர் போன்றவற்றால் நொதித்தல் மூலம் உணவானது சிறிய அணுக்களாக மாற்றப்பட்டு, குடல் உறிஞ்சிகள் மூலம் அந்த சிறிய சக்தி அணுக்கள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவுதான் சக்தி உணவுகளைச் சாப்பிட்டாலும் நம் உடல் தேவையானதை மட்டுமே உறிஞ்சி எடுக்கும்.மற்றவை கழிவாக வெளியேற்றப்படும். ஆக இந்த குடல் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்ட சக்தி அணுக்கள் இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும். அப்போது அந்த சக்தியானது நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி அதிலிருந்து ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. இந்த ஹார்மோன்களும் இரத்தத்தில் கலந்து நமக்கு அதிக சக்தியைத் தருகிறது. அடுத்த பதிவில் சுரப்பிகளைப் பற்றி பார்ப்போம். இதை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால்தான் தனிமங்களின் சித்து நமக்குப் புரியும்.நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்களைப் பற்றி பார்ப்போமா ?
வைட்டமின் ஏ
உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இதன் குறைபாடு மாலைக்கண் நோயை உருவாக்கும். இது மீன் எண்ணெய், வெண்ணெய், க்ரீம், கேரட், மக்காச் சோளம் போன்ற உணவுப் பொருள்களில் காணப்படுகிறது.
வைட்டமின் பி1
இது வளர்ச்சி, பசியைத் தூண்டுதல், நரம்பு மண்டலத்தின் சீரான பணி போன்றவற்றிற்கு அவசியமாகும். இது உலர்ந்த ஈஸ்ட், முழு தானியங்கள், தானியங்களின் தவிடு, மஞ்சள் கரு, பால் போன்ற உணவுப் பொருள்களில் கிடைக்கிறது.
வைட்டமின் பி2
பால், ஈஸ்ட், கல்லீரல் போன்ற உணவுப் பொருள்களில் காணப்படும் இதன் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்கள் சிகப்பாகக் காணப்படும், நாக்கு, வாயில் புண் ஏற்படும். வைட்டமின் பி யிலேயே இன்னும் நிறைய வைட்டமின் 6..... 12 போன்ற வேறுபட்ட சக்திகள் உள்ளன.
வைட்டமின் சி
இதன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். செல்களில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற பொருள்களில் காணப்படுகிறது.
வைட்டமின் டி
இதன் குறைபாடு உள்ளவர்களுக்கு ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படும் மேலும் பற்கள் சிதைதல், எலும்புகள் பலமிழந்து போதல் போன்ற துன்பங்கள் ஏற்படும். பால், மீன் எண்ணெய், கலலீரல், முட்டை போன்ற உணவுப் பொருள்களில் கிடைத்தாலும் சூரிய ஒளியில்தான் இது போதுமான அளவு கிடைக்கும். இதன் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
வைட்டமின் கே
இது கோதுமையில் அதிகம் கிடைக்கிறது. மேலும் பச்சை காய்கறிகள்,முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றில் அதிகம் உள்ளது. குழந்தை பாக்கியம், இயல்பான கருத்தரிப்புக்கு உதவுகிறது.
இதைப் போன்று நிறைய வைட்டமின்கள் நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்கு கிடைக்கின்றன. நமக்கு சக்தியளிப்பதோடு, நோய் வராமல் தடுக்கின்றன. ஆனால் நமக்கு விரைவாக சக்தியளிப்பவை கார்போஹைட்ரேட்டுகள் தான்.
அதாவது கார்பன், ஹைட்ரஜன்,. ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் கொண்ட கரிமச் சேர்மங்களை கார்போ ஹைட்ரேட்டுகள் என்பர். இவை முழுவதுமாக ஆக்சிகரணமடைவதால் சிறந்த சக்தியளிக்கும் பொருள்களாக உள்ளன.
இரண்டாவதாக சிறந்த சக்தியளிக்கும் பொருளாகக் கொழுப்பு உள்ளது. இது உடலில் ஆங்காங்கே சேமிக்கப் பட்டிருக்கும். தேவைப்படும் நேரத்தில் சக்தியை மெதுவாகக் கொடுக்கும். எனினும் இது நமக்கு அதிகம் தேவைப்படாத ஒரு பொருளேயாகும். அடுத்தபடியாகப் புரதங்களைச் சொல்லலாம். இவை முழுவதுமாக ஆக்சிகரணம் அடைவதில்லை. எனவே பூரண சக்தி கிடைப்பதில்லை. எனவே கார்போஹைட்ரேட்டுகளே முன்னிலை வகிக்கிறது. இதற்கு எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு, தேன், குளுக்கோஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். உடல் சோர்வாக இருக்கும் போது இவற்றை சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும். தெம்பு பிறக்கும்.
உணவுப் பொருள்களில் இருந்து பெறப்படும் சக்தியை குறிக்கும் அலகிற்கு கலோரி என்று பெயர். இதை c என்ற எழுத்தால் குறிப்பிடுவர். நமக்கு தேவையில்லாத கொழுப்பு இல்லாமல் அதிக கலோரி கிடைக்கும் உணவுப் பொருள்கள் தேனும், கரும்பும்தான். சுமார் 100கிராம்தேனில் மாவுச்சத்து 80 கிராமும், புரோட்டின்0.3 கிராமும் உள்ளது. கொழுப்பு துளிகூட இல்லை. இதன் மொத்த கலோரி 319cஆகும். இதேபோல 100கரும்புச்சாறில் 99கிராம் மாவுச் சத்தும் 1 கிராம் புரோட்டினும் உள்ளது.இதன் கலோரி 400c ஆகும். உயிரியல் துறை மேலே சொல்லப்பட்டுள்ள தனிமங்கள், சக்திகளைப் பற்றிதான் அதிகம் சொல்கிறது. ஆனால் இவற்றின் இயக்க ஆற்றல் மிகக் குறைவு. இவைகளால் அதிக சக்தி நமக்கு கிடைக்காவிட்டாலும், சில நோய்கள் வராமல் தடுக்க இவைகள் நமக்கு அவசியமாகும்.
சரி, ஆனால் இவற்றின் இயக்காற்றல் குறைவாக உள்ளதே, இயக்க ஆற்றல் உள்ள தனிமங்களைப் பெறுவது எவ்வாறு ? இந்த பகுதியில்தான் சித்தர்களின் ஆளுமை நமக்குத் தெரிய வருகிறது. அவர்களுக்கு தெரியாத எந்த விஷயங்களும் இல்லை. அதிக இயக்க ஆற்றலை மனிதர்கள் பெறுவதற்கு தங்கபஸ்பத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். எல்லோரும் தங்க பஸ்பம் சாப்பிட முடியுமா என்று நீங்கள் கேட்டால், அதற்கும் அவர்கள் வழி சொல்லியிருக்கிறார்கள். தங்கச்சத்து அதிகம் உள்ள உணவு கரிசலாங்கன்னி கீரை, ஒற்றைச் செம்பருத்திப்பூ, பொன்னாங்கன்னிக் கீரை, கல்தாமரை, சிவனார் வேம்பு, பிரம்மத் தண்டு போன்ற மூலிகைகளாகும். இவற்றை உணவில் சேர்த்து வந்தால் இயக்க ஆற்றலை அதிகம் பெறலாம். மேலும் முட்டைக் கோஸ், மாம்பழம் போன்றவற்றில் வெள்ளிச்சத்தும், தேன், கல்லீரல், முருங்கைகீரை, சிறுகீரையில் இரும்புச் சத்தும் மிகுதியாகக் கிடைக்கும் என்று சொன்னதும் நம் சித்தர் பெருமக்களே. எனவே இயக்க ஆற்றல் அதிகம் உள்ள உணவைச் சேர்த்து உண்பதால் நம் உடல் அதிக சுறுசுற்ப்பைப் பெறும். இந்த உணவுகளில் இருந்து சக்திகளை நம் உடல் எப்படிப் பெறுகிறது ?
எந்த உணவும் இரப்பைக்குத்தான் சொல்லும். அங்கு சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், முன் சிறு குடலில் சுரக்கும் கணைய நீர், கல்லீரலில் சுரக்கும் கல்லீரல் நீர் போன்றவற்றால் நொதித்தல் மூலம் உணவானது சிறிய அணுக்களாக மாற்றப்பட்டு, குடல் உறிஞ்சிகள் மூலம் அந்த சிறிய சக்தி அணுக்கள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவுதான் சக்தி உணவுகளைச் சாப்பிட்டாலும் நம் உடல் தேவையானதை மட்டுமே உறிஞ்சி எடுக்கும்.மற்றவை கழிவாக வெளியேற்றப்படும். ஆக இந்த குடல் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்ட சக்தி அணுக்கள் இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும். அப்போது அந்த சக்தியானது நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி அதிலிருந்து ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. இந்த ஹார்மோன்களும் இரத்தத்தில் கலந்து நமக்கு அதிக சக்தியைத் தருகிறது. அடுத்த பதிவில் சுரப்பிகளைப் பற்றி பார்ப்போம். இதை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால்தான் தனிமங்களின் சித்து நமக்குப் புரியும்.

No comments:

Post a Comment