Friday, March 28, 2014

மனதை அடக்க, பசியை அடக்க, விந்தை கட்டுப்படுத்த, காம உணர்வை மட்டுப்படுத்த

Photo: தியானம், பிராணாயாமம் பற்றி சொல்லி வந்த நீங்கள் தத்துவங்கள், மாயை போன்ற விஷயங்களைச் சொல்லி குழப்புவது போல் தோன்றுகிறது என்று சில நண்பர்கள் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இந்த விஷயங்கள் அவ்வளவு ரசனையாக இருக்காது. அல்லது இந்த விஷயங்களையும் ரசனையாக எடுத்துச் சொல்லும் திறன் எனக்கு குறைவாக இருக்கலாம். ஆனாலும், இந்த உடல் மற்றும் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து உணராமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்வது நல்லது. ஒரு ஆற்றை நாம் கடக்க வேண்டும் என்றால் அதன் ஆழம் மற்றும் அதில் உள்ள மேடு பள்ளங்களைத் தெரிந்திருப்பது நல்லது. தெரிந்திருந்தால் ஆழம் குறைந்த பகுதி வழியாக நடந்தே கடந்து விடலாம். இல்லையென்றால் படகு ஒன்றை தேட வேண்டியதிருக்கும். 

இவற்றை  ஒரு முறை படித்தவர்கள், ஒரு வேளை மறந்து விடக் கூடும். எனினும் அவர்கள் ஆழ்மனமானது இவற்றை எல்லாம் பதிந்து வைத்துக் கொள்ளும். அந்தப் பதிவுகள் தக்க சமயத்தில் அவர்கள் கேள்விகளுக்கு பதிலாக முன் வந்து நிற்கும். அப்போது அவர்களுக்கு ஞாபகம் இருக்காது இந்த பதில் இராம் மனோகர் அவர்கள் பதிவுகளைப் படித்ததால் கிடைத்தது என்று. எனக்குத் தேவையும் அதுதான். நான் என்னை முன்னிலை படுத்திக் கொள்ளவோ, ஏதாவது பலன் கருதியோ இந்தக் களத்திற்கு வரவில்லை. விருப்பம் உள்ளவர்கள் தெரிந்து கொண்டு மேன்மை அடையட்டுமே என்ற ஒரே எண்ணம் மட்டுமே. விருப்பம் இல்லாதவர்கள் என் பிதற்றல்களை ஒதுக்கி என்னை மறுதலித்து விட வேண்டுகிறேன். 

எத்தனையோ ஞானிகள், எத்தனையோ மகான்கள், எத்தனையோ சித்தர்கள், ரிஷிகள் எல்லாம் சொல்லாத எதையும் நான் இங்கே புதிதாகச் சொல்லி விடப் போவதில்லை. நான் பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். மனிதர்கள் வாழும் இடத்தில் கிடைக்காத பாதுகாப்பும், தனிமையுமா வனாந்திரங்களில் கிடைத்து விடப் போகிறது என்று. ஆனால் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகே அதற்கான பதில் எனக்குக் கிடைத்தது. ஔடதங்கள், அமிர்தம் என்றெல்லாம் வழங்கப்படும் மருந்துகள் தயாரிக்கத் தேவையான மூலிகைகள் நிமித்தமே சித்தர்கள் காடுகளை நாடியிருக்கிறார்கள். உடற் பிணிக்கு மட்டுமல்ல பிறவிப்பிணி, கர்ம்ப் பிணி, மனப்பிணி போன்றவற்றை போக்கவும் மூலிகைகளால் முடியும் என்பதே அதற்குக் காரணம். உடலானாலும், மனமானாலும் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் போதே அது பிணி எனப்படுகிறது. அதற்கு ஆங்கில மருத்துவம் வருவதற்கு முன் ஔடதமாகிய மூலிகை மருந்துகளே இருந்தன.  அவற்றோடு பாஷாணங்கள் கலந்து கசாயமாகவோ, குளிகையாகவோ, பற்பமாகவோ அருந்தியே பிணிகளை போக்கியிருக்கிறார்கள்.

மனதை அடக்க, பசியை அடக்க, விந்தை கட்டுப்படுத்த, காம உணர்வை மட்டுப்படுத்த என்று பல்வேறு விஷயங்களை மூலிகைகளால் சாதித்துக் கொள்ளலாம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல இலட்சக் கணக்கான மூலிகைகள் . அவற்றின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது என்பதே பெரிய கலை. எனவே அவற்றின் உதவியோடு உடலை கற்ப தேகமாக மாற்றிக் கொண்டு இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெருநிலையை அடைந்தார்கள். திருமூலர் சொல்லும் '' உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் '' என்ற சூக்கும வரிகளும் குறிப்பிடுவது இதைத்தான். பல பிறவிகள் எடுத்து அடைய வேண்டிய நிலையை இந்தப் பிறவியிலேயே அடைய வேண்டும் என்பதே நோக்கம். ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்றால், மனதை அடக்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்காகத்தான் அவர்கள் மேலும் சில யுக்திகளை கையாண்டார்கள். அதாவது, யந்திரங்கள், தந்திரங்கள் மந்திரங்கள் முதலியன. 

சரியையில் பல பிறவிகள், கிரியையில் பல பிறவிகள், யோகத்தில் பல பிறவிகள், முடிவில் ஞானத்தில் கூட சில பிறவிகள் எடுத்தே முக்தியடைய முடியும் என்பது கோட்பாடு. பிறவிகளே இல்லை என்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். பிறவி ஞானிகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வள்ளலார், ஞானசம்பந்தர் போன்ற பல பிறவி ஞானிகள் நம் மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்திமாயிற்று என்றால், பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஞான நிலையில் வாழ்ந்ததினாலேயே ஆகும். இப்படி பல பிறவிகள் கொண்டு சாதிப்பதை அல்லது இயல்பாகவே ஜீவன் பல பிறவிகள் எடுத்து பக்குமடைந்து அடையும் முக்தியை இந்தப் பிறவியிலேயே அடைய வேண்டும் என்று முனைந்து, முனிவனாகி, துறவியாகி, சித்தனாகி வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். அந்த முயற்சியின் பயனாக நமக்குக் கிடைத்ததே மூலிகை மருத்துவம். அவர்கள் முயற்சியில் சகல விதமான மூலிகைகளைப் பற்றியும் ஆராய்ந்து எழுதிய ஏடுகளே இன்றளவும் சித்த மருத்துவமாக இருந்து வருகிறது. 

இதோடு விட்டார்களா ? உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் வெகு துல்லியமாக கணித்து எழுதியிருக்கிறார்கள். உடலில் மலம் தங்கி பாதிப்பதைப் போல மனதிலும் பாவங்களான மலங்கள் தங்கி பாதிப்பைத் தருகின்றன என்கிறார்கள். எனவே உடலோடு மனதையும் பாதுகாப்பதற்காகவே பண்டைய ரிஷிகள் கர்ம்பரிகார ஔடதகாண்டங்களை அருளியிருக்கிறார்கள்.பதஞ்சலி மகானின் யோக சூத்திரம் முழுவதும் மன இயலே. உடலைப் பற்றி சொல்லப் போனால் பிணிகளை நாடிகள் மூலம் கண்டறியலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்களே சித்தர்கள்தான். இறந்த உடலை அறுத்துப் பார்த்து நரம்புகளையும், தசைகளையும் உறுப்புகளையும் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எந்த வித உபகரணங்களும் இல்லாது நாடிகளைப் பற்றியும், அவற்றின் துடிப்புகள் பற்றியும் எவ்வாறு சொன்னார்கள். அது ஞானத்தால் என்பதை உணர்க.  அவர்கள் குறிப்பிடும் எத்தனையோ நாடிகளை விஞ்ஞானத்தால் இன்று வரை காண இயலவில்லை என்றே சொல்லலாம். கேட்டால் அதெல்லாம் பொய் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். 

மனித தேகத்தில் 72000 நாடிகள் உள்ளதாகச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதில் துடிப்புகளால் பிணியை உணர்த்தும் நாடிகளாக ஐந்து நாடிகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவை, வாதம், பித்தம், சிலேத்துவம், பூதம், குரு என்பவைகளாகும். முதல் மூன்று நாடிகளை மணிக்கட்டில் அறியலாம். அதாவது வாத நாடியை ஆள்காட்டி விரலாலும், பித்த நாடியை நடுவிரலாலும், ஐயம் எனும் சிலேத்துவ நாடியை மோதிர விரலாலும் அறியலாம். வாதம் கோழியின் நடையைப் போன்ற துடிப்பையும், பித்தம் தவளையின் தாவலைப் போன்ற துடிப்பையும், சிலேத்துவம் பாம்பின் நெளிதலைப் போன்ற துடிப்பையும் உடையதாகச் சொல்லியிருக்கிறார்கள். பூத நாடியை கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையிலும், குரு நாடியை மோதிர விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவிலும் அறியலாம். இந்த இரண்டு நாடிகளையும் உணர அனுபவம் தேவை. இவற்றைக் கொண்டு ஒரு ஜீவனுடைய அசுர பலம், தெய்வீக பலம், யோக பலம் மூன்றையும் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. 

இது போக இடகலை, பிங்கலை, ஸுஷும்னை என்ற மூன்று நாடிகளைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்குகிறார்கள். இவை மூன்றும் சேரும் இடமான உள்நாக்குத் தாரையே திரிவேணி என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற மூன்றும் சந்திக்கும் இடமான திரிவேணி சங்கமம் குறிப்பிடப்படுகிறது. இடகலை, பிங்கலையை நாம் மூச்சினால் அறிகிறோம். கங்கையும், யமுனையும் நம் கண் முன் ஓடுகின்றன. ஸுஷும்னை சூக்குமமாக அமைந்துள்ளது. அதைப் போலவே சரஸ்வதி என்ற நதியும் பூமிக்கு உள்ளே ஓடுவதாகச் சொல்லப்படுகிறது. தேகத்தை உணர்ந்த ஜீவன் நான் என்ற அகந்தையை நீக்கியவனாக ஆகிவிடுவான். மலங்களிலேயே எளிதில் நீக்க முடியாத மலம் அதுவே ஆகும். ஏனென்றால் அதுவே மூலமலம் எனப்படுகிறது. அப்படி அகந்தையை களைந்த ஜீவன் கங்கை, யமுனை, சரஸ்வதி என்றழைக்கப்படும் இடகலை, பிங்கலை, ஸுஷும்னையின் சங்கமத்தில் தன் பாவங்களைக் கழுவி புண்ணியகதி அடைகிறான். 

ஔடதங்கள் என்றால் அருமருந்து என்று பொருள். மூலிகைகள், பாஷாணங்கள், உபசாரங்கள், தாது உப்புக்கள் யாவும் ஔடதங்கள் என்ற அரு மருந்து செய்யப் பயன்படும். ஆனாலும் இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த ஔடதமாகச் சித்தர்கள் குறிப்பிடுவது தன் தேகத்தில் உள் நாக்குத் தாரையில் ஊறுகின்ற அமிர்தத்தையே. அதைப் பருகுகிறவன் ஜீவன் முக்தனே. அவனுக்கு அழிவேதுமில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. இதையே காயாதி கற்பம் என்பார்கள்.  சித்தர்களைப் பற்றி சிந்திக்கும் இவ்வேளையில் உள்நாக்குத் தாரையில் ஊறும் அமிர்தத்தையும் மனதால் சிந்திப்பீர்களாக. அவ்வாறு சிந்திக்கும் பட்சத்தில் உங்களுக்கு சித்தர்களின் பரிபூரண ஆசி சித்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தியானம், பிராணாயாமம் பற்றி சொல்லி வந்த நீங்கள் தத்துவங்கள், மாயை போன்ற விஷயங்களைச் சொல்லி குழப்புவது போல் தோன்றுகிறது என்று சில நண்பர்கள் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இந்த விஷயங்கள் அவ்வளவு ரசனையாக இருக்காது. அல்லது இந்த விஷயங்களையும் ரசனையாக எடுத்துச் சொல்லும் திறன் எனக்கு குறைவாக இருக்கலாம். ஆனாலும், இந்த உடல் மற்றும் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து உணராமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்வது நல்லது. ஒரு ஆற்றை நாம் கடக்க வேண்டும் என்றால் அதன் ஆழம் மற்றும் அதில் உள்ள மேடு பள்ளங்களைத் தெரிந்திருப்பது நல்லது. தெரிந்திருந்தால் ஆழம் குறைந்த பகுதி வழியாக நடந்தே கடந்து விடலாம். இல்லையென்றால் படகு ஒன்றை தேட வேண்டியதிருக்கும்.

இவற்றை ஒரு முறை படித்தவர்கள், ஒரு வேளை மறந்து விடக் கூடும். எனினும் அவர்கள் ஆழ்மனமானது இவற்றை எல்லாம் பதிந்து வைத்துக் கொள்ளும். அந்தப் பதிவுகள் தக்க சமயத்தில் அவர்கள் கேள்விகளுக்கு பதிலாக முன் வந்து நிற்கும். அப்போது அவர்களுக்கு ஞாபகம் இருக்காது. எனக்குத் தேவையும் அதுதான். நான் என்னை முன்னிலை படுத்திக் கொள்ளவோ, ஏதாவது பலன் கருதியோ இந்தக் களத்திற்கு வரவில்லை. விருப்பம் உள்ளவர்கள் தெரிந்து கொண்டு மேன்மை அடையட்டுமே என்ற ஒரே எண்ணம் மட்டுமே. விருப்பம் இல்லாதவர்கள் என் பிதற்றல்களை ஒதுக்கி என்னை மறுதலித்து விட வேண்டுகிறேன்.

எத்தனையோ ஞானிகள், எத்தனையோ மகான்கள், எத்தனையோ சித்தர்கள், ரிஷிகள் எல்லாம் சொல்லாத எதையும் நான் இங்கே புதிதாகச் சொல்லி விடப் போவதில்லை. நான் பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். மனிதர்கள் வாழும் இடத்தில் கிடைக்காத பாதுகாப்பும், தனிமையுமா வனாந்திரங்களில் கிடைத்து விடப் போகிறது என்று. ஆனால் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகே அதற்கான பதில் எனக்குக் கிடைத்தது. ஔடதங்கள், அமிர்தம் என்றெல்லாம் வழங்கப்படும் மருந்துகள் தயாரிக்கத் தேவையான மூலிகைகள் நிமித்தமே சித்தர்கள் காடுகளை நாடியிருக்கிறார்கள். உடற் பிணிக்கு மட்டுமல்ல பிறவிப்பிணி, கர்ம்ப் பிணி, மனப்பிணி போன்றவற்றை போக்கவும் மூலிகைகளால் முடியும் என்பதே அதற்குக் காரணம். உடலானாலும், மனமானாலும் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் போதே அது பிணி எனப்படுகிறது. அதற்கு ஆங்கில மருத்துவம் வருவதற்கு முன் ஔடதமாகிய மூலிகை மருந்துகளே இருந்தன. அவற்றோடு பாஷாணங்கள் கலந்து கசாயமாகவோ, குளிகையாகவோ, பற்பமாகவோ அருந்தியே பிணிகளை போக்கியிருக்கிறார்கள்.

மனதை அடக்க, பசியை அடக்க, விந்தை கட்டுப்படுத்த, காம உணர்வை மட்டுப்படுத்த என்று பல்வேறு விஷயங்களை மூலிகைகளால் சாதித்துக் கொள்ளலாம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். ஒன்றல்ல இரண்டல்ல இலட்சக் கணக்கான மூலிகைகள் . அவற்றின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது என்பதே பெரிய கலை. எனவே அவற்றின் உதவியோடு உடலை கற்ப தேகமாக மாற்றிக் கொண்டு இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெருநிலையை அடைந்தார்கள். திருமூலர் சொல்லும் '' உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் '' என்ற சூக்கும வரிகளும் குறிப்பிடுவது இதைத்தான். பல பிறவிகள் எடுத்து அடைய வேண்டிய நிலையை இந்தப் பிறவியிலேயே அடைய வேண்டும் என்பதே நோக்கம். ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்றால், மனதை அடக்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்காகத்தான் அவர்கள் மேலும் சில யுக்திகளை கையாண்டார்கள். அதாவது, யந்திரங்கள், தந்திரங்கள் மந்திரங்கள் முதலியன.

சரியையில் பல பிறவிகள், கிரியையில் பல பிறவிகள், யோகத்தில் பல பிறவிகள், முடிவில் ஞானத்தில் கூட சில பிறவிகள் எடுத்தே முக்தியடைய முடியும் என்பது கோட்பாடு. பிறவிகளே இல்லை என்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். பிறவி ஞானிகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வள்ளலார், ஞானசம்பந்தர் போன்ற பல பிறவி ஞானிகள் நம் மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்திமாயிற்று என்றால், பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஞான நிலையில் வாழ்ந்ததினாலேயே ஆகும். இப்படி பல பிறவிகள் கொண்டு சாதிப்பதை அல்லது இயல்பாகவே ஜீவன் பல பிறவிகள் எடுத்து பக்குமடைந்து அடையும் முக்தியை இந்தப் பிறவியிலேயே அடைய வேண்டும் என்று முனைந்து, முனிவனாகி, துறவியாகி, சித்தனாகி வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். அந்த முயற்சியின் பயனாக நமக்குக் கிடைத்ததே மூலிகை மருத்துவம். அவர்கள் முயற்சியில் சகல விதமான மூலிகைகளைப் பற்றியும் ஆராய்ந்து எழுதிய ஏடுகளே இன்றளவும் சித்த மருத்துவமாக இருந்து வருகிறது.

இதோடு விட்டார்களா ? உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் வெகு துல்லியமாக கணித்து எழுதியிருக்கிறார்கள். உடலில் மலம் தங்கி பாதிப்பதைப் போல மனதிலும் பாவங்களான மலங்கள் தங்கி பாதிப்பைத் தருகின்றன என்கிறார்கள். எனவே உடலோடு மனதையும் பாதுகாப்பதற்காகவே பண்டைய ரிஷிகள் கர்ம்பரிகார ஔடதகாண்டங்களை அருளியிருக்கிறார்கள்.பதஞ்சலி மகானின் யோக சூத்திரம் முழுவதும் மன இயலே. உடலைப் பற்றி சொல்லப் போனால் பிணிகளை நாடிகள் மூலம் கண்டறியலாம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்களே சித்தர்கள்தான். இறந்த உடலை அறுத்துப் பார்த்து நரம்புகளையும், தசைகளையும் உறுப்புகளையும் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எந்த வித உபகரணங்களும் இல்லாது நாடிகளைப் பற்றியும், அவற்றின் துடிப்புகள் பற்றியும் எவ்வாறு சொன்னார்கள். அது ஞானத்தால் என்பதை உணர்க. அவர்கள் குறிப்பிடும் எத்தனையோ நாடிகளை விஞ்ஞானத்தால் இன்று வரை காண இயலவில்லை என்றே சொல்லலாம். கேட்டால் அதெல்லாம் பொய் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள்.

மனித தேகத்தில் 72000 நாடிகள் உள்ளதாகச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதில் துடிப்புகளால் பிணியை உணர்த்தும் நாடிகளாக ஐந்து நாடிகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவை, வாதம், பித்தம், சிலேத்துவம், பூதம், குரு என்பவைகளாகும். முதல் மூன்று நாடிகளை மணிக்கட்டில் அறியலாம். அதாவது வாத நாடியை ஆள்காட்டி விரலாலும், பித்த நாடியை நடுவிரலாலும், ஐயம் எனும் சிலேத்துவ நாடியை மோதிர விரலாலும் அறியலாம். வாதம் கோழியின் நடையைப் போன்ற துடிப்பையும், பித்தம் தவளையின் தாவலைப் போன்ற துடிப்பையும், சிலேத்துவம் பாம்பின் நெளிதலைப் போன்ற துடிப்பையும் உடையதாகச் சொல்லியிருக்கிறார்கள். பூத நாடியை கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையிலும், குரு நாடியை மோதிர விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவிலும் அறியலாம். இந்த இரண்டு நாடிகளையும் உணர அனுபவம் தேவை. இவற்றைக் கொண்டு ஒரு ஜீவனுடைய அசுர பலம், தெய்வீக பலம், யோக பலம் மூன்றையும் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இது போக இடகலை, பிங்கலை, ஸுஷும்னை என்ற மூன்று நாடிகளைப் பற்றியும் மிகத் தெளிவாக விளக்குகிறார்கள். இவை மூன்றும் சேரும் இடமான உள்நாக்குத் தாரையே திரிவேணி என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற மூன்றும் சந்திக்கும் இடமான திரிவேணி சங்கமம் குறிப்பிடப்படுகிறது. இடகலை, பிங்கலையை நாம் மூச்சினால் அறிகிறோம். கங்கையும், யமுனையும் நம் கண் முன் ஓடுகின்றன. ஸுஷும்னை சூக்குமமாக அமைந்துள்ளது. அதைப் போலவே சரஸ்வதி என்ற நதியும் பூமிக்கு உள்ளே ஓடுவதாகச் சொல்லப்படுகிறது. தேகத்தை உணர்ந்த ஜீவன் நான் என்ற அகந்தையை நீக்கியவனாக ஆகிவிடுவான். மலங்களிலேயே எளிதில் நீக்க முடியாத மலம் அதுவே ஆகும். ஏனென்றால் அதுவே மூலமலம் எனப்படுகிறது. அப்படி அகந்தையை களைந்த ஜீவன் கங்கை, யமுனை, சரஸ்வதி என்றழைக்கப்படும் இடகலை, பிங்கலை, ஸுஷும்னையின் சங்கமத்தில் தன் பாவங்களைக் கழுவி புண்ணியகதி அடைகிறான்.

ஔடதங்கள் என்றால் அருமருந்து என்று பொருள். மூலிகைகள், பாஷாணங்கள், உபசாரங்கள், தாது உப்புக்கள் யாவும் ஔடதங்கள் என்ற அரு மருந்து செய்யப் பயன்படும். ஆனாலும் இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த ஔடதமாகச் சித்தர்கள் குறிப்பிடுவது தன் தேகத்தில் உள் நாக்குத் தாரையில் ஊறுகின்ற அமிர்தத்தையே. அதைப் பருகுகிறவன் ஜீவன் முக்தனே. அவனுக்கு அழிவேதுமில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. இதையே காயாதி கற்பம் என்பார்கள். சித்தர்களைப் பற்றி சிந்திக்கும் இவ்வேளையில் உள்நாக்குத் தாரையில் ஊறும் அமிர்தத்தையும் மனதால் சிந்திப்பீர்களாக. அவ்வாறு சிந்திக்கும் பட்சத்தில் உங்களுக்கு சித்தர்களின் பரிபூரண ஆசி சித்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2 comments:

  1. Very good and usefull post.
    Thanks for sharing.

    ReplyDelete
  2. எந்த மூலிகை?

    ReplyDelete