Friday, March 28, 2014

பரம்பொருளை அடைவதற்கு பாதைகள் பல உள்ளன!

Photo: நம் தமிழ் மண்ணைப் பொறுத்தவரை ஐந்து வகை நிலங்கள். அவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும். இந்த ஐவகை நிலங்களிலும் கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நாகரிகம் எல்லாம் வேறு வேறாக காணப்படும். அது போல இந்த உலகில் பல்வேறு தேசங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நில அமைப்புகள், தட்பவெப்ப நிலைகள், மொழி எல்லாம் ஒன்றுக் கொன்று மாறுபடுகின்றன. அதற்கேற்றவாறு அவர்கள் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு முறைகள் எல்லாம் மாறுபடுகின்றன. உலகில் பல வகையான தெய்வ நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும், ஆன்மிக சாதனங்களும் காணப்படுகின்றன. ஆனால், எல்லாம் ஏற்றுக் கொள்வது நமக்கு மேலான ஒரு சக்தியைத்தான். முடிவு என்னவோ எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். என்றாலும், அவரவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகளையும், வணங்கும் தெய்வங்களையும் தவிர மற்றவற்றை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆரம்ப காலங்களில் அந்தந்த பகுதி மக்கள் அவரவர் பகுதிகளிலேயே உழைத்து, உண்டு, இன்புற்று வாழ்ந்த காலங்களில் யாதொரு சிக்கலும் இல்லை. ஆனால், மக்கள் பெருக்கம் அதிகமானதாலும், பிற தேசங்களில் போய் வாணிபம் செய்யப் போனதாலும், அப்போது அந்த தேசங்களின் வளமையேப் பார்த்து ஆசைப்பட்டு போர் செய்து அந்த தேசங்களை கைப்பற்றி தங்கள் மக்களை அங்கு கொண்டு போய் குடியமர்த்தியதாலும், மேலும், தங்கள் வழிபாட்டு முறையையும், தெய்வங்களையும் அங்குள்ள மக்கள் மீது திணித்ததாலும், தற்போது பரவலாக எல்லா தேசங்களிலும் எல்லாவகையான வழிபாடு செய்பவர்களும் கலந்து பரவலாகக் காணப்படுகிறார்கள். எல்லா தேசங்களிலும் ஞானிகள் தோன்றி மக்களை நெறிப்படுத்தியிருக்கிறார்கள். மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனை அடைவதையே எல்லாப் பிரிவுகளும் போதனை செய்கின்றன. உட்கார்ந்து கும்பிட்டாலும், நின்று கும்பிட்டாலும், படுத்து உருண்டாலும் போய்ச் சேரும் இடம் என்னவோ ஒன்றுதான். உருவத்தை வணங்கினாலும், உருவமற்ற நிலையை வணங்கினாலும், அருவுருவத்தை வணங்கினாலும் எல்லா வழிபாடுகளின் நோக்கம் என்னவோ ஒன்றுதான்.

முறையாக இறையுணர்வோடு வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள் எல்லா சமயங்களிலும் இருந்திருக்கிறார்கள். தவத்தின் மூலமாகவும் ஞானத்தை அடையலாம், பக்தியின் மூலமாகவும் ஞானத்தை அடையலாம். எந்தப் பிரிவாக இருந்தாலும், எந்த முறையாக இருந்தாலும் அது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளில்தான் அடங்கும். எல்லாம் மனதை ஒழுங்குபடுத்திக் குவிக்கிற முயற்சியே. பக்தி மற்றும் உருவ வழிபாடைக் குறித்த தவறான கருத்து எனக்கும் இருந்தது. ஒரு சமயம் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் படிக்கும் போது அந்த எண்ணம் தவிடு பொடி ஆகியது. பக்தியின் மூலமாகவும் மன ஒருமைப்பாடு ஏற்பட்டு ஞானமும், முக்தியும் அடையலாம் என்பதை உணர்ந்தேன். ஞானமார்க்கம் நெருப்பு என்றால் பக்தி மார்க்கம் நீராகும். ஞானாக்கினி கர்மத்தைப் பொசுக்கி அழிக்கிறது. பக்தி என்ற கடலோ ஜீவவியக்தியை கரைத்து தன்மயமாக்குகிறது. பக்தி என்பது ஆனந்தக் கடல். அதில் மூழ்கித் திளைக்கும் பக்தன் சர்க்கரை பொம்மைக்கு ஒப்பாக இருக்கிறான். ஆனந்த சாகரத்தில் மூழ்கி மூழ்கி அவன் தன் ஜீவ வியக்தியை இழந்து தன்மயமாகி ஆத்மாவை உணர்கிறான். என்ன ஒருவன் உருவத்தை இறைவன் என்கிறான். இன்னொவன் உருவமற்ற வல்லமையான சக்தியை இறைவன் என்கிறான். ஆனால், எல்லாம் இறைவனே. இரண்டும் இறைவன்பாற் செலுத்தும் பக்தியே.

இன்று பலகோடிகள் செலவு செய்து கண்டு பிடிக்கும் விஞ்ஞான இரகசியங்களை, பக்தியால் அடைந்த ஞானத்தால் மாணிக்கவாசகப் பெருமான் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். ஞானிகள் தங்கள் ஞானத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் கண்டு உணர முடியும் என்பதை திருவண்டப்பகுதி என்ற பகுதியில் உள்ள திருவாசகப் பாடல்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நிருபித்துக் காட்டியிருக்கிறார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து.........

என்று விரிகிறது.

பிரமாண்டமான பல அண்டங்களை உடைய அகண்டாகாரமானது எண்ணிறந்த கோள்களையுடையது.(கண்டம் என்றால் துண்டிக்கப்பட்டது. அகண்டம் என்றால் துண்டிப்பு இல்லாமல் விரிந்து கிடப்பது. அதுவே அகண்டாகாரம்.) அப்படிப்பட்ட எண்ணிறந்த கோள்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கவனித்துப் பார்க்கும் போது, அவைகளின் அழகும், சீரமைப்பும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு கோளத்திலும் ஒரு தனி அழகுடன் விளங்குகிறது. சொல்லப் போனால் அவைகள் கோடிக் கணக்கில் அகண்டாகாரத்தில் விரிந்து செல்கின்றன. கூறையில் உள்ள ஓட்டை வழியாக வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியில் அலையும் அணுப் போன்ற தூசிகளைப் போல, கோள்களெல்லாம் அகண்டாகாரத்தில் மிதக்கும் தூசு போலத் தென்படுகின்றன. இதைப் பார்க்கும் போது சிறியதாகிய அணுவுக்குள்ளும், பெரியதாகிய அண்டங்களுக்குள்ளும் அடிப்படை அமைப்பாக விளங்குவது இறைவனே என்கிற உண்மை புரிய வருகிறது. எண்ணிறந்த பிரம்மாக்களும், அவர்களுக்கெல்லாம் மூலமாக இருக்கும் விஷ்ணுவும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும், மகாப் பிரளயமும், அதன் இருப்பும், முடிவும் ஆகிய இவை யாவும் இறைவா உன் செயலே. வேகமாக வீசுகிற சுழற்காற்றில் அடங்கியிருக்கும் சிறிய காற்று சுழன்று இடம் மாறுவது போல எல்லாம் மாறுவது உன்செயலாலேதான் என்று அந்த பாடல் தொகுதி விரிகிறது.

எனவே பரம்பொருளை அடைவதற்கு பாதைகள் பல உள்ளன. அதில் அவரவர்கள் வழிகளிலே சென்று இறைவனை அடைவதே அவரவர்களுக்கு உகந்ததாகும். இதிலே அதுதான் சிறந்தது, இதுதான் சிறந்தது என்று எண்ணுவதெல்லாம் அறியாமையே ஆகும். இறைவனோடு பேரன்பு வைப்பதே பக்தியாகும். அன்பு பெருகப் பெருக அது இன்பமாகப் பரிணமிக்கின்றது. அன்பு இல்லாத ஆன்மிகமும், பக்தியும் துன்பமயமானது.
நம் தமிழ் மண்ணைப் பொறுத்தவரை ஐந்து வகை நிலங்கள். அவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப்படும். இந்த ஐவகை நிலங்களிலும் கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நாகரிகம் எல்லாம் வேறு வேறாக காணப்படும். அது போல இந்த உலகில் பல்வேறு தேசங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நில அமைப்புகள், தட்பவெப்ப நிலைகள், மொழி எல்லாம் ஒன்றுக் கொன்று மாறுபடுகின்றன. அதற்கேற்றவாறு அவர்கள் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு முறைகள் எல்லாம் மாறுபடுகின்றன. உலகில் பல வகையான தெய்வ நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும், ஆன்மிக சாதனங்களும் காணப்படுகின்றன. ஆனால், எல்லாம் ஏற்றுக் கொள்வது நமக்கு மேலான ஒரு சக்தியைத்தான். முடிவு என்னவோ எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். என்றாலும், அவரவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகளையும், வணங்கும் தெய்வங்களையும் தவிர மற்றவற்றை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆரம்ப காலங்களில் அந்தந்த பகுதி மக்கள் அவரவர் பகுதிகளிலேயே உழைத்து, உண்டு, இன்புற்று வாழ்ந்த காலங்களில் யாதொரு சிக்கலும் இல்லை. ஆனால், மக்கள் பெருக்கம் அதிகமானதாலும், பிற தேசங்களில் போய் வாணிபம் செய்யப் போனதாலும், அப்போது அந்த தேசங்களின் வளமையேப் பார்த்து ஆசைப்பட்டு போர் செய்து அந்த தேசங்களை கைப்பற்றி தங்கள் மக்களை அங்கு கொண்டு போய் குடியமர்த்தியதாலும், மேலும், தங்கள் வழிபாட்டு முறையையும், தெய்வங்களையும் அங்குள்ள மக்கள் மீது திணித்ததாலும், தற்போது பரவலாக எல்லா தேசங்களிலும் எல்லாவகையான வழிபாடு செய்பவர்களும் கலந்து பரவலாகக் காணப்படுகிறார்கள். எல்லா தேசங்களிலும் ஞானிகள் தோன்றி மக்களை நெறிப்படுத்தியிருக்கிறார்கள். மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனை அடைவதையே எல்லாப் பிரிவுகளும் போதனை செய்கின்றன. உட்கார்ந்து கும்பிட்டாலும், நின்று கும்பிட்டாலும், படுத்து உருண்டாலும் போய்ச் சேரும் இடம் என்னவோ ஒன்றுதான். உருவத்தை வணங்கினாலும், உருவமற்ற நிலையை வணங்கினாலும், அருவுருவத்தை வணங்கினாலும் எல்லா வழிபாடுகளின் நோக்கம் என்னவோ ஒன்றுதான்.

முறையாக இறையுணர்வோடு வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள் எல்லா சமயங்களிலும் இருந்திருக்கிறார்கள். தவத்தின் மூலமாகவும் ஞானத்தை அடையலாம், பக்தியின் மூலமாகவும் ஞானத்தை அடையலாம். எந்தப் பிரிவாக இருந்தாலும், எந்த முறையாக இருந்தாலும் அது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளில்தான் அடங்கும். எல்லாம் மனதை ஒழுங்குபடுத்திக் குவிக்கிற முயற்சியே. பக்தி மற்றும் உருவ வழிபாடைக் குறித்த தவறான கருத்து எனக்கும் இருந்தது. ஒரு சமயம் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் படிக்கும் போது அந்த எண்ணம் தவிடு பொடி ஆகியது. பக்தியின் மூலமாகவும் மன ஒருமைப்பாடு ஏற்பட்டு ஞானமும், முக்தியும் அடையலாம் என்பதை உணர்ந்தேன். ஞானமார்க்கம் நெருப்பு என்றால் பக்தி மார்க்கம் நீராகும். ஞானாக்கினி கர்மத்தைப் பொசுக்கி அழிக்கிறது. பக்தி என்ற கடலோ ஜீவவியக்தியை கரைத்து தன்மயமாக்குகிறது. பக்தி என்பது ஆனந்தக் கடல். அதில் மூழ்கித் திளைக்கும் பக்தன் சர்க்கரை பொம்மைக்கு ஒப்பாக இருக்கிறான். ஆனந்த சாகரத்தில் மூழ்கி மூழ்கி அவன் தன் ஜீவ வியக்தியை இழந்து தன்மயமாகி ஆத்மாவை உணர்கிறான். என்ன ஒருவன் உருவத்தை இறைவன் என்கிறான். இன்னொவன் உருவமற்ற வல்லமையான சக்தியை இறைவன் என்கிறான். ஆனால், எல்லாம் இறைவனே. இரண்டும் இறைவன்பாற் செலுத்தும் பக்தியே.

இன்று பலகோடிகள் செலவு செய்து கண்டு பிடிக்கும் விஞ்ஞான இரகசியங்களை, பக்தியால் அடைந்த ஞானத்தால் மாணிக்கவாசகப் பெருமான் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். ஞானிகள் தங்கள் ஞானத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் கண்டு உணர முடியும் என்பதை திருவண்டப்பகுதி என்ற பகுதியில் உள்ள திருவாசகப் பாடல்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நிருபித்துக் காட்டியிருக்கிறார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து.........

என்று விரிகிறது.

பிரமாண்டமான பல அண்டங்களை உடைய அகண்டாகாரமானது எண்ணிறந்த கோள்களையுடையது.(கண்டம் என்றால் துண்டிக்கப்பட்டது. அகண்டம் என்றால் துண்டிப்பு இல்லாமல் விரிந்து கிடப்பது. அதுவே அகண்டாகாரம்.) அப்படிப்பட்ட எண்ணிறந்த கோள்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கவனித்துப் பார்க்கும் போது, அவைகளின் அழகும், சீரமைப்பும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு கோளத்திலும் ஒரு தனி அழகுடன் விளங்குகிறது. சொல்லப் போனால் அவைகள் கோடிக் கணக்கில் அகண்டாகாரத்தில் விரிந்து செல்கின்றன. கூறையில் உள்ள ஓட்டை வழியாக வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியில் அலையும் அணுப் போன்ற தூசிகளைப் போல, கோள்களெல்லாம் அகண்டாகாரத்தில் மிதக்கும் தூசு போலத் தென்படுகின்றன. இதைப் பார்க்கும் போது சிறியதாகிய அணுவுக்குள்ளும், பெரியதாகிய அண்டங்களுக்குள்ளும் அடிப்படை அமைப்பாக விளங்குவது இறைவனே என்கிற உண்மை புரிய வருகிறது. எண்ணிறந்த பிரம்மாக்களும், அவர்களுக்கெல்லாம் மூலமாக இருக்கும் விஷ்ணுவும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும், மகாப் பிரளயமும், அதன் இருப்பும், முடிவும் ஆகிய இவை யாவும் இறைவா உன் செயலே. வேகமாக வீசுகிற சுழற்காற்றில் அடங்கியிருக்கும் சிறிய காற்று சுழன்று இடம் மாறுவது போல எல்லாம் மாறுவது உன்செயலாலேதான் என்று அந்த பாடல் தொகுதி விரிகிறது.

எனவே பரம்பொருளை அடைவதற்கு பாதைகள் பல உள்ளன. அதில் அவரவர்கள் வழிகளிலே சென்று இறைவனை அடைவதே அவரவர்களுக்கு உகந்ததாகும். இதிலே அதுதான் சிறந்தது, இதுதான் சிறந்தது என்று எண்ணுவதெல்லாம் அறியாமையே ஆகும். இறைவனோடு பேரன்பு வைப்பதே பக்தியாகும். அன்பு பெருகப் பெருக அது இன்பமாகப் பரிணமிக்கின்றது. அன்பு இல்லாத ஆன்மிகமும், பக்தியும் துன்பமயமானது.

No comments:

Post a Comment