Friday, March 28, 2014

தங்கத்தில் இயக்க ஆற்றல் அதிகம்


Photo: நீங்கள் சொன்னதின் பேரில் இரசமணி வாங்கி அணிந்துள்ளேன். தங்கத்தில் இயக்க ஆற்றல் அதிகம் இருப்பதாகச் சொல்கிறீர்களே தங்க பஸ்பம் சாப்பிடலாமா ? அன்பர் இரேசந்திரன் அவர்கள் போனில் கேட்டார். நான் என்ன சொல்ல முடியும். மருத்துவரிடம் கேளுங்கள். அவர் அது உங்களுக்குத் தேவை அல்லது சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்றால் பரிந்துரை செய்வார். அப்படி இல்லை என்றால் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்றேன். தங்க பஸ்பம் தானே சார் அது ஒன்றும் கெடுதி இல்லையே. அது சாப்பிட்டால் உடல் அழகாக இருக்கும் என்று சொல்கிறார்களே ? முகமும் வசிகரமாக இருக்குமாமே ? என்றும் விடாமல் கேட்டார். மீண்டும் மருத்துவரிடம் கேளுங்கள், நீங்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னதும், போனை துண்டித்து விட்டார். கோபம் வந்து விட்டது போலும். நான் அவ்வாறு சொல்வதற்கு காரணம் இருக்கிறது. சரி சாப்பிடுங்கள் என்று சொல்லி விடலாம். ஆனால் அது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஏன் என்றால் எந்த உலோகம் கலந்த மருந்தாக இருந்தாலும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாகச் சித்தர்கள் தங்கபஸ்பம் சாப்பிச் சொன்னார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே கொடுக்கமாட்டார்கள்.
முதலில் வேர் கொண்டு தயாரித்த மருந்து, பிறகு இலைகள் கொண்டு தயாரித்த மருந்து, அதன் பிறகு பற்பம், செந்தூரம் என்றெல்லாம் கொடுத்து பல சோதனைகளுக்குப் பிறகே உலோக மருந்துகளைத் தருவார்கள். அதுவும் மிகக் குறைந்த அளவே உலோகங்கள் அதில் இருக்கும். நம் இஷ்டத்துக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும் என்று உருட்டி உருட்டி விழுங்கினால் பிறகு உள்ள ஆற்றலும் போய்விடும். தங்கபஸ்பம் கலந்த மாத்திரைகள் அதாவது கேப்ஸ்யல்கள் கடைகளில் கிடைக்கின்றன. லேகியங்களும் உண்டு. அது இல்லாமல் தங்கத்தை பற்பமாக்கி, சில மூலிகைகள் கலந்து, புடம் போட்டு தயாரிக்கும் தங்கபற்பமும் கிடைக்கும். அதை ஒரு நாளைக்கு 200மிகி அளவே கூடினால் 250, அதாவது ஒரு கிராமை நான்கு அல்லது ஐந்து நாட்கள் சாப்பிடச் சொல்வார்கள். அதுவும் ஒரு மண்டலம் மட்டுமே. பிறகு சோதனை செய்து பார்த்து விட்டுதான் தேவை என்றால் தருவார்கள். எயிட்ஸ், புற்று நோய் போன்ற சில நோய்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. முற்றிலும் குணமாகும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஆயுளை அதிகரித்துக் கொள்ளலாம். வாத நோய்களுக்கு கூட பரிந்துரை செய்யப்படுகிறது. இன்றைய கால சூழலில் நோயாளிக்கு அதைக் கொடுக்கலாமா என்று சோதித்துப் பார்ப்பது எளிது. அதாவது இரத்தம், சிறுநீர் பரியோதனை செய்து, அதில் கிரியாட்டினின் என்கிற இராசாயன அளவு 1.4 ஆக இருக்க வேண்டும். அதிகமாக இருக்க க் கூடாது. யூரியா 35மிகி க்கு குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக இருக்கக் கூடாது. அதிகமாகஇருந்தால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறைவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதைப்போல அல்புமின் என்கிற புரதப் பொருள் சிறுநீரக ரிசல்டில் நெகடிவ் என்று இருக்க வேண்டும். இதையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் எந்த உலோகம் கலந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆசையாக இருந்தால் அந்தத் தனிமச் சத்துகள் அடங்கிய மூலிகைகளை உண்ணலாம். எந்தக கெடுதியும் ஏற்படாது. உதாரணமாக கரிசலாங்கன்னி, ஒற்றைச் செம்பருத்திப்பூ, பொன்னாங்கன்னிகீரை, கல் தாமரை, சிவனார் வேம்பு, பிரம்மத் தண்டு போன்ற மூலிகை களில் தங்கச்சத்து உள்ளது. இந்தக் கல்தாமரையில் செம்புச் சத்தும் உள்ளது. மாப்பழம் முட்டைகோஸ் போன்றவற்றில் வெள்ளிச் சத்து உள்ளது. தேன், சிறுகீரை, முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. இப்படி இந்த மூலிகைகளைப் பயன்னடுத்துவதன் மூலம் அதில் உள்ள உலோகங்களுக்கு அதிபதியான கிரகங்களின் தோஷங்கள் கூட நீங்கிவிடும் என்று சொல்லப் படுகிறது. எனவே எதையும் முறைப்படி சிந்தித்து செயல்படுத்துவது உடலுக்கும், உயிருக்கும் நல்லது.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.
நீங்கள் சொன்னதின் பேரில் இரசமணி வாங்கி அணிந்துள்ளேன். தங்கத்தில் இயக்க ஆற்றல் அதிகம் இருப்பதாகச் சொல்கிறீர்களே தங்க பஸ்பம் சாப்பிடலாமா ? அன்பர் இரேசந்திரன் அவர்கள் போனில் கேட்டார். நான் என்ன சொல்ல முடியும். மருத்துவரிடம் கேளுங்கள். அவர் அது உங்களுக்குத் தேவை அல்லது சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்றால் பரிந்துரை செய்வார். அப்படி இல்லை என்றால் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்றேன். தங்க பஸ்பம் தானே சார் அது ஒன்றும் கெடுதி இல்லையே. அது சாப்பிட்டால் உடல் அழகாக இருக்கும் என்று சொல்கிறார்களே ? முகமும் வசிகரமாக இருக்குமாமே ? என்றும் விடாமல் கேட்டார். மீண்டும் மருத்துவரிடம் கேளுங்கள், நீங்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்னதும், போனை துண்டித்து விட்டார். கோபம் வந்து விட்டது போலும். நான் அவ்வாறு சொல்வதற்கு காரணம் இருக்கிறது. சரி சாப்பிடுங்கள் என்று சொல்லி விடலாம். ஆனால் அது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஏன் என்றால் எந்த உலோகம் கலந்த மருந்தாக இருந்தாலும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாகச் சித்தர்கள் தங்கபஸ்பம் சாப்பிச் சொன்னார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே கொடுக்கமாட்டார்கள்.
முதலில் வேர் கொண்டு தயாரித்த மருந்து, பிறகு இலைகள் கொண்டு தயாரித்த மருந்து, அதன் பிறகு பற்பம், செந்தூரம் என்றெல்லாம் கொடுத்து பல சோதனைகளுக்குப் பிறகே உலோக மருந்துகளைத் தருவார்கள். அதுவும் மிகக் குறைந்த அளவே உலோகங்கள் அதில் இருக்கும். நம் இஷ்டத்துக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும் என்று உருட்டி உருட்டி விழுங்கினால் பிறகு உள்ள ஆற்றலும் போய்விடும். தங்கபஸ்பம் கலந்த மாத்திரைகள் அதாவது கேப்ஸ்யல்கள் கடைகளில் கிடைக்கின்றன. லேகியங்களும் உண்டு. அது இல்லாமல் தங்கத்தை பற்பமாக்கி, சில மூலிகைகள் கலந்து, புடம் போட்டு தயாரிக்கும் தங்கபற்பமும் கிடைக்கும். அதை ஒரு நாளைக்கு 200மிகி அளவே கூடினால் 250, அதாவது ஒரு கிராமை நான்கு அல்லது ஐந்து நாட்கள் சாப்பிடச் சொல்வார்கள். அதுவும் ஒரு மண்டலம் மட்டுமே. பிறகு சோதனை செய்து பார்த்து விட்டுதான் தேவை என்றால் தருவார்கள். எயிட்ஸ், புற்று நோய் போன்ற சில நோய்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. முற்றிலும் குணமாகும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஆயுளை அதிகரித்துக் கொள்ளலாம். வாத நோய்களுக்கு கூட பரிந்துரை செய்யப்படுகிறது. இன்றைய கால சூழலில் நோயாளிக்கு அதைக் கொடுக்கலாமா என்று சோதித்துப் பார்ப்பது எளிது. அதாவது இரத்தம், சிறுநீர் பரியோதனை செய்து, அதில் கிரியாட்டினின் என்கிற இராசாயன அளவு 1.4 ஆக இருக்க வேண்டும். அதிகமாக இருக்க க் கூடாது. யூரியா 35மிகி க்கு குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக இருக்கக் கூடாது. அதிகமாகஇருந்தால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறைவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதைப்போல அல்புமின் என்கிற புரதப் பொருள் சிறுநீரக ரிசல்டில் நெகடிவ் என்று இருக்க வேண்டும். இதையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் எந்த உலோகம் கலந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆசையாக இருந்தால் அந்தத் தனிமச் சத்துகள் அடங்கிய மூலிகைகளை உண்ணலாம். எந்தக கெடுதியும் ஏற்படாது. உதாரணமாக கரிசலாங்கன்னி, ஒற்றைச் செம்பருத்திப்பூ, பொன்னாங்கன்னிகீரை, கல் தாமரை, சிவனார் வேம்பு, பிரம்மத் தண்டு போன்ற மூலிகை களில் தங்கச்சத்து உள்ளது. இந்தக் கல்தாமரையில் செம்புச் சத்தும் உள்ளது. மாப்பழம் முட்டைகோஸ் போன்றவற்றில் வெள்ளிச் சத்து உள்ளது. தேன், சிறுகீரை, முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. இப்படி இந்த மூலிகைகளைப் பயன்னடுத்துவதன் மூலம் அதில் உள்ள உலோகங்களுக்கு அதிபதியான கிரகங்களின் தோஷங்கள் கூட நீங்கிவிடும் என்று சொல்லப் படுகிறது. எனவே எதையும் முறைப்படி சிந்தித்து செயல்படுத்துவது உடலுக்கும், உயிருக்கும் நல்லது.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்

No comments:

Post a Comment