Friday, March 28, 2014

தன் ஆன்மா மீது தனக்கு ஏற்படும் அன்பே ஆன்மீகம்

Photo: முத்தொழில் என்பார்கள். படைத்தல் காத்தல் அழித்தல் என்பனவே அவை என்பது நமக்குத் தெரியும். இந்த பிரபஞ்சம் எங்கும் அந்த செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நமக்குள்ளும் அச்செயல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால், அது எவ்வாறு என்று அறியாமலும், அச்செயலுக்கு ஆதரம் எது என்று அறியாமலும், அதை வீணே விரையம் செய்து மாய்ந்து போகிறோம். மரணம் எதனால் ஏற்படுகிறது ? உடலில் உள்ள உயிர் அணுக்கள் குறைந்து போவதால் செல்கள் இறந்தால் மீண்டும் உயிர்ப்படையாமல் போய் விடுவதால் ஒவ்வொரு உறுப்பாக வலிமையிழந்து, செயலிழந்து இறந்து போகிறோம். இங்கே தான் ஒரு கேள்வி வருகிறது. நல்ல வலிமையான உடல் பெற்றவனும் இறந்து போய்விடுகிறானே ? காயகல்பம் உண்டவனும் இறந்து போய்விடுகிறானே ? என்று. உண்மைதான் . ஆனால், பிறக்கும் போது எந்த அளவு உயிர் திணிவு உடலில் இருந்ததோ, அந்த அளவு திணிவு ஒரு மனிதனின் கடைசி மூச்சு விடும் போதும் இருக்குமாயின் அவன் சாவதில்லை, இணைகிறான். பேராற்றலில் இணைகிறான். உயிரணுக்களை இழந்து, உயிரை இழந்தவனே சாகிறான். அவன் பேராற்றலில் இணையும் வலிமையை, தகுதியை இழந்து விட்டான். எனவே மீண்டும் அந்த தகுதியைப் பெறுவதற்காகப் பிறக்கிறான். இணந்தவன் பிறப்பதில்லை. இறந்தவனே பிறக்கிறான். எனவேதான் இணைதலுக்கான முயற்சியை சாகாக் கலை என்கிறார்கள். செத்தவனே பிறப்பான். சாகாமல் இணைந்தவனுக்கு பிறப்பில்லை.

நம் தலையில் உள்ள முடி நரைத்து விட்டது என்றால் அது தன் உயிர் சக்தியை இழந்து விட்டது என்று பொருள். வழுக்கை விழுந்து விட்டால் முடி செத்து உதிர்ந்து விட்டது என்று பொருள். இப்படி ஒவ்வொரு செல்களுமாக இறந்து நாம் தினம் தினம் மரணத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம் உயிர் அணுக்கள் வலிமை இழந்து போவதுதான். நம் உடலில் நடக்கும் படைத்தல் , காத்தல், அழித்தல் என்னவென்றால் படைத்தல் என்பது உயிர் அணுக்களின் உற்பத்தி, காத்தல் என்றால் உயிர் அணுக்கள் வலிமையிழந்து போகாத வண்ணம் உடலைப் பராமரித்தல், அழித்தல் என்றால் இறந்து போன உயிர் அணுக்களை வெளியேற்றுதல். இது நாம் வாழும் காலம் வரை நம் உடலில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளாகும். இதில் என்ன வேதனை என்றால், மயிர் உதிர்வதற்காக வருந்துகிற அளவு கூட நாம் உயிர் அணுக்கள் இறந்து போவதைப்பற்றி அறிந்து கொள்ளவுமில்லை, வருந்துவதுமில்லை.

மனிதனின் உயிர் சக்தியாக, உயிராக விளங்குவது எது என்று மறை பொருளாகச் சித்தர்கள் சொல்லி வைத்தார்கள். காலப் போக்கில் அது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த போதும் மனிதன் அதைப் பாதுகாப்பதற்கான முயற்சியை சரிவர மேற்கொள்வதில்லை. ஒரு உயிரை உருவாக்க ஒரே ஒரு உயிரணுதான் தேவை. பிறகு ஏன் கோடிக்கணக்கான உயிரணுக்கள் உதிரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன ? சிந்தித்துப் பாருங்கள். ஏனென்றால் அந்த உயிர்ப் பொருள் நாம் ஜீவித்திருக்கும் வரை நம் உடலுக்குத் தேவை என்பதால்தான். உயிரைப் படைப்பதற்காக படைக்கப்பட்ட உயிர் பொருள் உள்ளேயே தங்கி விட்டால் உயிர் உறுதியாக உடலில் தங்கி உடலையும் வலிமையாக்கும். மனம் பலவீனமாக உள்ளவர்களே புலன்களுக்கு அடிமையாகி உயிர்ப் பொருளை விரையம் செய்கிறார்கள். அவர்களுக்கே உயிர் பசி. மனோபலம் உடைய யோகிகளுக்கோ பசியே உயிர்தான்.

எல்லாம் ஒன்றுதான். காணும் இந்தத் தோற்றத்தின் மாறுபாடுகள் எல்லாம் அழியக் கூடியவை. இது முதுமைக்காண பயணம். உயிர் பொருள் குறையக் குறைய உடலின் அழகு குறைந்து கொண்டே போகிறது. காமம் மனிதனை எரிக்கும் சக்தியாக, உணர்வாக உள்ளது. எனவேதான் சிவன் முதலில் காமனை எரித்தார். காமம் எரிந்து போனதால் எமனையும் எரித்தார் என்று புராணக் கதை சொல்வார்கள். அதுவும் நெற்றிக் கண்ணால் எரித்தார் என்றால், ஞானத்தால் எரித்தார் என்று பொருள். அதாவது காமனை வென்றவர்கள் எமனையும் வெல்லலாம் என்பதாகும் சூக்குமம். எனவே சரீர சுகம் வேண்டி உயிர் சுகத்தை இழப்பதை விடுத்து, உயிர் சுகத்தைப் பெறுவதற்காக சரீர சுகங்களை தியாகம் செய்யப் பழகுங்கள். இதுவே ஆன்மீகம். தன் மீது தனக்கு அதாவது தன் ஆன்மா மீது தனக்கு ஏற்படும் அன்பே ஆன்மீகம். தன் உயிரைத் தான் அறியாமல், தன் உயிர்ப் பொருளையும் உணராமல் இருப்பவர்கள் எத்தனை கோவில்கள், எத்தனை மலைகள் போனாலும், எத்தனை புனித நதிகளில் நீராடினாலும் பயனில்லை. உணர்ந்து கொள்பவர்களை இந்தப் பாதையே ஞான வாசலில் கொண்டு போய் சேர்ப்பிக்கும்.
முத்தொழில் என்பார்கள். படைத்தல் காத்தல் அழித்தல் என்பனவே அவை என்பது நமக்குத் தெரியும். இந்த பிரபஞ்சம் எங்கும் அந்த செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நமக்குள்ளும் அச்செயல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால், அது எவ்வாறு என்று அறியாமலும், அச்செயலுக்கு ஆதரம் எது என்று அறியாமலும், அதை வீணே விரையம் செய்து மாய்ந்து போகிறோம். மரணம் எதனால் ஏற்படுகிறது ? உடலில் உள்ள உயிர் அணுக்கள் குறைந்து போவதால் செல்கள் இறந்தால் மீண்டும் உயிர்ப்படையாமல் போய் விடுவதால் ஒவ்வொரு உறுப்பாக வலிமையிழந்து, செயலிழந்து இறந்து போகிறோம். இங்கே தான் ஒரு கேள்வி வருகிறது. நல்ல வலிமையான உடல் பெற்றவனும் இறந்து போய்விடுகிறானே ? காயகல்பம் உண்டவனும் இறந்து போய்விடுகிறானே ? என்று. உண்மைதான் . ஆனால், பிறக்கும் போது எந்த அளவு உயிர் திணிவு உடலில் இருந்ததோ, அந்த அளவு திணிவு ஒரு மனிதனின் கடைசி மூச்சு விடும் போதும் இருக்குமாயின் அவன் சாவதில்லை, இணைகிறான். பேராற்றலில் இணைகிறான். உயிரணுக்களை இழந்து, உயிரை இழந்தவனே சாகிறான். அவன் பேராற்றலில் இணையும் வலிமையை, தகுதியை இழந்து விட்டான். எனவே மீண்டும் அந்த தகுதியைப் பெறுவதற்காகப் பிறக்கிறான். இணந்தவன் பிறப்பதில்லை. இறந்தவனே பிறக்கிறான். எனவேதான் இணைதலுக்கான முயற்சியை சாகாக் கலை என்கிறார்கள். செத்தவனே பிறப்பான். சாகாமல் இணைந்தவனுக்கு பிறப்பில்லை.

நம் தலையில் உள்ள முடி நரைத்து விட்டது என்றால் அது தன் உயிர் சக்தியை இழந்து விட்டது என்று பொருள். வழுக்கை விழுந்து விட்டால் முடி செத்து உதிர்ந்து விட்டது என்று பொருள். இப்படி ஒவ்வொரு செல்களுமாக இறந்து நாம் தினம் தினம் மரணத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம் உயிர் அணுக்கள் வலிமை இழந்து போவதுதான். நம் உடலில் நடக்கும் படைத்தல் , காத்தல், அழித்தல் என்னவென்றால் படைத்தல் என்பது உயிர் அணுக்களின் உற்பத்தி, காத்தல் என்றால் உயிர் அணுக்கள் வலிமையிழந்து போகாத வண்ணம் உடலைப் பராமரித்தல், அழித்தல் என்றால் இறந்து போன உயிர் அணுக்களை வெளியேற்றுதல். இது நாம் வாழும் காலம் வரை நம் உடலில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளாகும். இதில் என்ன வேதனை என்றால், மயிர் உதிர்வதற்காக வருந்துகிற அளவு கூட நாம் உயிர் அணுக்கள் இறந்து போவதைப்பற்றி அறிந்து கொள்ளவுமில்லை, வருந்துவதுமில்லை.

மனிதனின் உயிர் சக்தியாக, உயிராக விளங்குவது எது என்று மறை பொருளாகச் சித்தர்கள் சொல்லி வைத்தார்கள். காலப் போக்கில் அது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த போதும் மனிதன் அதைப் பாதுகாப்பதற்கான முயற்சியை சரிவர மேற்கொள்வதில்லை. ஒரு உயிரை உருவாக்க ஒரே ஒரு உயிரணுதான் தேவை. பிறகு ஏன் கோடிக்கணக்கான உயிரணுக்கள் உதிரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன ? சிந்தித்துப் பாருங்கள். ஏனென்றால் அந்த உயிர்ப் பொருள் நாம் ஜீவித்திருக்கும் வரை நம் உடலுக்குத் தேவை என்பதால்தான். உயிரைப் படைப்பதற்காக படைக்கப்பட்ட உயிர் பொருள் உள்ளேயே தங்கி விட்டால் உயிர் உறுதியாக உடலில் தங்கி உடலையும் வலிமையாக்கும். மனம் பலவீனமாக உள்ளவர்களே புலன்களுக்கு அடிமையாகி உயிர்ப் பொருளை விரையம் செய்கிறார்கள். அவர்களுக்கே உயிர் பசி. மனோபலம் உடைய யோகிகளுக்கோ பசியே உயிர்தான்.

எல்லாம் ஒன்றுதான். காணும் இந்தத் தோற்றத்தின் மாறுபாடுகள் எல்லாம் அழியக் கூடியவை. இது முதுமைக்காண பயணம். உயிர் பொருள் குறையக் குறைய உடலின் அழகு குறைந்து கொண்டே போகிறது. காமம் மனிதனை எரிக்கும் சக்தியாக, உணர்வாக உள்ளது. எனவேதான் சிவன் முதலில் காமனை எரித்தார். காமம் எரிந்து போனதால் எமனையும் எரித்தார் என்று புராணக் கதை சொல்வார்கள். அதுவும் நெற்றிக் கண்ணால் எரித்தார் என்றால், ஞானத்தால் எரித்தார் என்று பொருள். அதாவது காமனை வென்றவர்கள் எமனையும் வெல்லலாம் என்பதாகும் சூக்குமம். எனவே சரீர சுகம் வேண்டி உயிர் சுகத்தை இழப்பதை விடுத்து, உயிர் சுகத்தைப் பெறுவதற்காக சரீர சுகங்களை தியாகம் செய்யப் பழகுங்கள். இதுவே ஆன்மீகம். தன் மீது தனக்கு அதாவது தன் ஆன்மா மீது தனக்கு ஏற்படும் அன்பே ஆன்மீகம். தன் உயிரைத் தான் அறியாமல், தன் உயிர்ப் பொருளையும் உணராமல் இருப்பவர்கள் எத்தனை கோவில்கள், எத்தனை மலைகள் போனாலும், எத்தனை புனித நதிகளில் நீராடினாலும் பயனில்லை. உணர்ந்து கொள்பவர்களை இந்தப் பாதையே ஞான வாசலில் கொண்டு போய் சேர்ப்பிக்கும்.

No comments:

Post a Comment