Friday, March 28, 2014

நீங்கள் கேவலமாகப் பேசுகிற அளவுக்கு அது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை

Photo: ஐயா, நீங்கள் இந்த பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவதை விடுத்து இன்றைய நவீன யுகத்துக்குத் தக்கவாறு எதாவது உபயோகமான பதிவுகளைத் தாருங்கள் என்று சில நண்பர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பஞ்சாங்கம் என்றால் என்னவென்று தெரிந்தால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களின் வானியல் ஞானத்தை உலகுக்கு பறை சாற்றும் விண் ஞான சாஸ்திரமாகும். நம் பாரத கண்டத்தைச் சேர்ந்த ரிஷிகளும், சித்தர்களும், கணித மேதைகளும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் ஞானம் பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அதில் கணிதமும், வானியலும் அடங்கும். பூஜ்ஜியம் கண்டுபிடிக்கப்பட்டதே நம் இந்தியாவில்தான். 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போதாயனார், 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியப்பட்டர் போன்றவர்கள் பல அரிய கணித சூத்திரங்களைத் தங்கள் நூல்களில் தந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் நூல்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்கள் முன்னோர்களான ரிஷிகளின் ஏடுகளில் இருந்தே இத்தகைய வானியல் மற்றும் கணித முறைகளைக் கற்றுத் தெரிந்து கொண்டதாகபச் சொல்கிறார்கள்.

ஆரியப்பட்டர்தான் ஒரு வருடம் 365 நாட்களைக் கொண்டது என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரின் கணிதம் மற்றும் வானியல் சுவடிகளைக் ஹாலந்து தேசத்திற்கு கடத்திச் சென்று விட்டனர். 1874 ஆம் ஆண்டுதான் அங்கிருந்த நடுநிலையாளர்கள் அவரின் சுவடிகளை லெயிடன் என்ற நகரில் நூலாக வெளியிட்டனர். பிறகு அது 1879 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரிஸில் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஆரியப்பட்டரை இந்தியர்களுக்கேத் தெரிய வந்தது. ஆரியப்பட்டரின் கணக்குப்படி பூமியின் சுற்றளவு 3,300 யோசனை தூரம். அதாவது 26,800 மைல்கள். தற்காலிக விஞ்ஞானிகளின் கணக்கிற்கு இது ஏறக்குறைய சமமாகவே உள்ளது. 

அதற்கும் முன்பாக இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண காலத்திலேயே நம் மக்கள் வானியல் அறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். கி.மு 8756 ஆம் ஆண்டு வாழ்ந்த வைவஸ்த மனு என்ற பாரத நாட்டைச் சேர்ந்த மன்னனின் அவையில் இருந்த வானியல் அறிஞர்கள் 27 நட்சத்திரக் கூட்டங்களையும் 27 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்தையும் கடக்க சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவையும் துள்ளியமாகக் கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்கள். இப்படி எவ்வளவோ அரிய பெரிய விஷயங்கள் அடங்கிய சித்தர்கள், மற்றும் ரிஷிகளின் சுவடிகளை நாம் இழந்து விட்டோம். சூரியன் நிலையாக தன்னைத் தானே சுற்றுகிறது. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னவர் கோப்பர் நிக்கஸ் என்பார்கள். ஆனால் 5,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தத்தில் நம் முன்னோர்கள் இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் பூமி சூரினை ஒரு முறை சுற்றி வர எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது என்பதையும் வினாடி சுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் பூமி தட்டையானதல்ல உருண்டையானது என்பதை நிரூபிக்க பல எடுத்துக்காட்டுகளையும் கூறியிருக்கிறார்கள். 

இவ்வளவு கருத்துக்களையும் ஏன் சொல்கிறேன் என்றால், பழைய பஞ்சாங்கம் என்று நீங்கள் கேவலமாகப் பேசுவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது நம் முன்னர்களின், நம் தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அறிவாற்றல் இவற்றை உலகுக்கு உணர்த்தும் அடையாளமாகும். அது வானவியல் பொக்கிஷமாகும். அதை முறைப்படி கற்றுணர்ந்து பயன்படுத்துபவர்கள் வாழ்வில் மேன்மையடைவது திண்ணம். பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையே அந்த ஐந்து அங்கங்கள். திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பதாகும். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரமாகும். கரணம் என்பது திதியில் பாதி. வாரம் என்பது கிழமை. நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இவைகளையெல்லாம் கால அளவில் கணிதப்படுத்தி நமக்குத் தெரிவிப்பதே பஞ்சாங்கம். எனவே பஞ்சாங்கம் என்பது ஆகாயத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் அவற்றில் உள்ள கிரகங்கள் ஆகியவற்றின் நிலைகளை நமக்கு உணர்த்துகிற வழிகாட்டியாகும். சூரியன், சந்திரன் மற்ற கிரகங்களின் காந்த சக்தியின் ஆற்றல் பூமியின் மீதும், அதில் வாழும் உயிரினங்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இன்று விஞ்ஞானமே ஏற்றுக் கொள்கிறது.  இன்ன நாளில் இன்ன நட்சத்திரத்திற்கு இன்ன கிரகம் வருகிறது, சந்திரன் எந்த நட்சத்திரத்திற்கு வருகிறது, இன்ன நட்சத்திரம், இன்ன கிரகம் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிவாகத் தெரிவிப்பதே பஞ்சாங்கம். 

எனவே நீங்கள் கேவலமாகப் பேசுகிற அளவுக்கு அது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை என்பதோடு, நான் இங்கே பதிவிடுகிற விஷயங்களும் அதைப் போலவே மனதிற்கும், அறிவிற்கும், ஆன்மாவிற்கும் நலம் பயக்கும் விஷயங்களே என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தாகம் உள்ளவர்கள் அருந்திக் கொள்ளட்டும்.
ஐயா, நீங்கள் இந்த பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவதை விடுத்து இன்றைய நவீன யுகத்துக்குத் தக்கவாறு எதாவது உபயோகமான பதிவுகளைத் தாருங்கள் என்று சில நண்பர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். பஞ்சாங்கம் என்றால் என்னவென்று தெரிந்தால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களின் வானியல் ஞானத்தை உலகுக்கு பறை சாற்றும் விண் ஞான சாஸ்திரமாகும். நம் பாரத கண்டத்தைச் சேர்ந்த ரிஷிகளும், சித்தர்களும், கணித மேதைகளும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் ஞானம் பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அதில் கணிதமும், வானியலும் அடங்கும். பூஜ்ஜியம் கண்டுபிடிக்கப்பட்டதே நம் இந்தியாவில்தான். 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போதாயனார், 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியப்பட்டர் போன்றவர்கள் பல அரிய கணித சூத்திரங்களைத் தங்கள் நூல்களில் தந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் நூல்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்கள் முன்னோர்களான ரிஷிகளின் ஏடுகளில் இருந்தே இத்தகைய வானியல் மற்றும் கணித முறைகளைக் கற்றுத் தெரிந்து கொண்டதாகபச் சொல்கிறார்கள்.

ஆரியப்பட்டர்தான் ஒரு வருடம் 365 நாட்களைக் கொண்டது என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரின் கணிதம் மற்றும் வானியல் சுவடிகளைக் ஹாலந்து தேசத்திற்கு கடத்திச் சென்று விட்டனர். 1874 ஆம் ஆண்டுதான் அங்கிருந்த நடுநிலையாளர்கள் அவரின் சுவடிகளை லெயிடன் என்ற நகரில் நூலாக வெளியிட்டனர். பிறகு அது 1879 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரிஸில் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஆரியப்பட்டரை இந்தியர்களுக்கேத் தெரிய வந்தது. ஆரியப்பட்டரின் கணக்குப்படி பூமியின் சுற்றளவு 3,300 யோசனை தூரம். அதாவது 26,800 மைல்கள். தற்காலிக விஞ்ஞானிகளின் கணக்கிற்கு இது ஏறக்குறைய சமமாகவே உள்ளது.

அதற்கும் முன்பாக இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண காலத்திலேயே நம் மக்கள் வானியல் அறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். கி.மு 8756 ஆம் ஆண்டு வாழ்ந்த வைவஸ்த மனு என்ற பாரத நாட்டைச் சேர்ந்த மன்னனின் அவையில் இருந்த வானியல் அறிஞர்கள் 27 நட்சத்திரக் கூட்டங்களையும் 27 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்தையும் கடக்க சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவையும் துள்ளியமாகக் கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்கள். இப்படி எவ்வளவோ அரிய பெரிய விஷயங்கள் அடங்கிய சித்தர்கள், மற்றும் ரிஷிகளின் சுவடிகளை நாம் இழந்து விட்டோம். சூரியன் நிலையாக தன்னைத் தானே சுற்றுகிறது. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னவர் கோப்பர் நிக்கஸ் என்பார்கள். ஆனால் 5,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தத்தில் நம் முன்னோர்கள் இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் பூமி சூரினை ஒரு முறை சுற்றி வர எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது என்பதையும் வினாடி சுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் பூமி தட்டையானதல்ல உருண்டையானது என்பதை நிரூபிக்க பல எடுத்துக்காட்டுகளையும் கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவு கருத்துக்களையும் ஏன் சொல்கிறேன் என்றால், பழைய பஞ்சாங்கம் என்று நீங்கள் கேவலமாகப் பேசுவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது நம் முன்னர்களின், நம் தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அறிவாற்றல் இவற்றை உலகுக்கு உணர்த்தும் அடையாளமாகும். அது வானவியல் பொக்கிஷமாகும். அதை முறைப்படி கற்றுணர்ந்து பயன்படுத்துபவர்கள் வாழ்வில் மேன்மையடைவது திண்ணம். பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையே அந்த ஐந்து அங்கங்கள். திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பதாகும். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரமாகும். கரணம் என்பது திதியில் பாதி. வாரம் என்பது கிழமை. நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இவைகளையெல்லாம் கால அளவில் கணிதப்படுத்தி நமக்குத் தெரிவிப்பதே பஞ்சாங்கம். எனவே பஞ்சாங்கம் என்பது ஆகாயத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் அவற்றில் உள்ள கிரகங்கள் ஆகியவற்றின் நிலைகளை நமக்கு உணர்த்துகிற வழிகாட்டியாகும். சூரியன், சந்திரன் மற்ற கிரகங்களின் காந்த சக்தியின் ஆற்றல் பூமியின் மீதும், அதில் வாழும் உயிரினங்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இன்று விஞ்ஞானமே ஏற்றுக் கொள்கிறது. இன்ன நாளில் இன்ன நட்சத்திரத்திற்கு இன்ன கிரகம் வருகிறது, சந்திரன் எந்த நட்சத்திரத்திற்கு வருகிறது, இன்ன நட்சத்திரம், இன்ன கிரகம் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிவாகத் தெரிவிப்பதே பஞ்சாங்கம்.

எனவே நீங்கள் கேவலமாகப் பேசுகிற அளவுக்கு அது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை என்பதோடு, நான் இங்கே பதிவிடுகிற விஷயங்களும் அதைப் போலவே மனதிற்கும், அறிவிற்கும், ஆன்மாவிற்கும் நலம் பயக்கும் விஷயங்களே என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தாகம் உள்ளவர்கள் அருந்திக் கொள்ளட்டும்.

No comments:

Post a Comment