Friday, March 28, 2014

சிட்டுக் குருவி லேகியம்

Photo: ஆண்மை வீரிய லேகியங்கள், குதிரைப் படம் போட்ட மாத்திரைகள் மற்றும் இரவானால் போதும் இழந்து போன ஆண்மையைத் திரும்பப் பெற வேண்டுமா ? இதோ இந்த மருந்து அமேசான் காடுகளில் உள்ள விசித்திரமான நூற்றுக் கணக்கான மூலிகைகளால் தயாரானது போன்ற விளம்பரங்கள் பெரும்பாலான சேனல்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. நிறைய பேர் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறார்கள். கிளுகிளுப்பான படங்கள், புத்தகங்கள் இவற்றால் இளைஞர்கள் தன் உடலை கெடுத்துக் கொள்கிறார்கள். விந்து சக்தியோடு அவர்கள் உடலும் வீணாகிறது. இதனால் சிலருக்கு திருமணவாழ்வு சுகப்படாமல் போய்விடுகிறது. இதனால் பல தொல்லைகள், போராட்டங்கள். சிட்டுக் குருவி லேகியம், மாத்திரை, களிம்புகள் என்று தேடி அலைவதோடு பணமும் வீணாகிப் போகிறது. வசதி உள்ளவர்கள் தங்க பஸ்பம் கலந்த லேகியம் சாப்பிடுகிறார்கள். ஆனால் பரிதாபம் ஒன்றும் சரியாவதில்லை. 
இந்தத் தொல்லையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் சித்தாசனம் செய்து குறைகளை போக்கிக் கொள்ளலாம். இது யோக வழியில் ஆத்மார்த்தத்தில் முன்னேற ஏற்புடையதாக இருந்தாலும், உடல் நலத்திற்கும் சில முக்கிய வகைகளில் பயனுள்ளதாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் கூட இதை எளிதாகச் செய்து இல்லறத்தை இனிதே, அளவாக, முறையாக நடத்தலாம்.
செய்முறை ; சமதள விரிப்பின் மீது கால்களை அகட்டி சம்மணம் இட்டவாறு அமர்ந்து கொள்ளுங்கள். கட்டாயம் கௌபீணம் அல்லது ஜட்டி அணிந்திருக்க வேண்டும். சற்று தளர்வாக இருந்தாலும் குற்றமில்லை. இடது கைகளை விதைகளுக்கு அடியில் கொடுத்து தூக்கிக் கொண்டு வலது குதிக்காலை விதைக்கடியே ஆசனவாய்க்கு அருகே இடித்தபடி வைக்கவும். பிறகு இடது கையை நீக்கி விரைகளும் , குதப் பகுதியும் குதிக்கால் மேல் அமர விட்டு விடவும். பிறகு இடது காலை அருகே இழுத்து குறியைத் தூக்கி , குறி உற்பத்திக்கு இடத்திற்கு மேல் வைத்து பாதங்களைத் கீழ் நோக்கித் தொங்கவிடவும்.
இரண்டு முழங்கால்களும் கீழே தொட, பிருஷ்டம், தொடைகள் விரிப்பைத் தொட்டவாறு, கைகளை முழங்காள்களுக்கு மேல் விரைப்பாக வைத்துக் கொள்ளவும். முதுகு நன்கு விரைப்பாக நிமிர்ந்திருக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். 
விதைகளையும், குறியையும் வசதிக்கேற்றவாறு ஒதுக்கிக் கொள்ளலாம்.மூச்சு தடையின்றி அமைதியுடன் நடைபெற வேண்டும். கண்கள் மூடியோ அல்லது பாதி திறந்தோ இருக்கலாம். பார்வையை மூக்கு நுனியிலோ, அல்லது புருவ மத்தியிலோ வைத்துக் கொண்டால் சிறப்பு. வசதிக்கேற்றவாறு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமரலாம். 
இந்த ஆசனத்தோடே சேர்த்து நாடி சுத்தியோ, பிராணாயாமமும் செய்தால் வெகு சிறப்பு. எனவே இரண்டையும் செய்து அழகு, ஆரோக்யம், வலிமை, ஆற்றல் பெறுங்கள். 
இந்த ஆசனத்தால் பல நன்மைகள் உண்டு. தேகம் ஆரோக்யமாக விளங்கும். ஞாபக சக்தி பெருகும். தேஜஸ் அதிகரிக்கும். முக்கியமாக விந்து கெட்டிப்படும். வீரியம் அதிகரிக்கும். விந்து ஸ்கலிதம், விந்து முந்துதல் போன்ற குறைகள் நிவர்த்தியாகும்.பாலுணர்வு சமன்படும். அதன் பிறகு நீங்கள் எந்த லேகியத்தையும் தேட வேண்டியதில்லை. இது மனதையும் அமைதிப்படுத்தி, பிராண அசைவை சீராக்கி அமைதியை அளிக்கும். பெண்களும் இந்த ஆசனத்தை செய்து மேன்மையுறலாம். உபநிஷத்துகளால் புகழப்பட்ட ஆசனங்களில் மிகவும் மேன்மையானதாகும்.
ஆண்மை வீரிய லேகியங்கள், குதிரைப் படம் போட்ட மாத்திரைகள் மற்றும் இரவானால் போதும் இழந்து போன ஆண்மையைத் திரும்பப் பெற வேண்டுமா ? இதோ இந்த மருந்து அமேசான் காடுகளில் உள்ள விசித்திரமான நூற்றுக் கணக்கான மூலிகைகளால் தயாரானது போன்ற விளம்பரங்கள் பெரும்பாலான சேனல்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. நிறைய பேர் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறார்கள். கிளுகிளுப்பான படங்கள், புத்தகங்கள் இவற்றால் இளைஞர்கள் தன் உடலை கெடுத்துக் கொள்கிறார்கள். விந்து சக்தியோடு அவர்கள் உடலும் வீணாகிறது. இதனால் சிலருக்கு திருமணவாழ்வு சுகப்படாமல் போய்விடுகிறது. இதனால் பல தொல்லைகள், போராட்டங்கள். சிட்டுக் குருவி லேகியம், மாத்திரை, களிம்புகள் என்று தேடி அலைவதோடு பணமும் வீணாகிப் போகிறது. வசதி உள்ளவர்கள் தங்க பஸ்பம் கலந்த லேகியம் சாப்பிடுகிறார்கள். ஆனால் பரிதாபம் ஒன்றும் சரியாவதில்லை.
இந்தத் தொல்லையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் சித்தாசனம் செய்து குறைகளை போக்கிக் கொள்ளலாம். இது யோக வழியில் ஆத்மார்த்தத்தில் முன்னேற ஏற்புடையதாக இருந்தாலும், உடல் நலத்திற்கும் சில முக்கிய வகைகளில் பயனுள்ளதாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் கூட இதை எளிதாகச் செய்து இல்லறத்தை இனிதே, அளவாக, முறையாக நடத்தலாம்.
செய்முறை ; சமதள விரிப்பின் மீது கால்களை அகட்டி சம்மணம் இட்டவாறு அமர்ந்து கொள்ளுங்கள். கட்டாயம் கௌபீணம் அல்லது ஜட்டி அணிந்திருக்க வேண்டும். சற்று தளர்வாக இருந்தாலும் குற்றமில்லை. இடது கைகளை விதைகளுக்கு அடியில் கொடுத்து தூக்கிக் கொண்டு வலது குதிக்காலை விதைக்கடியே ஆசனவாய்க்கு அருகே இடித்தபடி வைக்கவும். பிறகு இடது கையை நீக்கி விரைகளும் , குதப் பகுதியும் குதிக்கால் மேல் அமர விட்டு விடவும். பிறகு இடது காலை அருகே இழுத்து குறியைத் தூக்கி , குறி உற்பத்திக்கு இடத்திற்கு மேல் வைத்து பாதங்களைத் கீழ் நோக்கித் தொங்கவிடவும்.
இரண்டு முழங்கால்களும் கீழே தொட, பிருஷ்டம், தொடைகள் விரிப்பைத் தொட்டவாறு, கைகளை முழங்காள்களுக்கு மேல் விரைப்பாக வைத்துக் கொள்ளவும். முதுகு நன்கு விரைப்பாக நிமிர்ந்திருக்க வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும்.
விதைகளையும், குறியையும் வசதிக்கேற்றவாறு ஒதுக்கிக் கொள்ளலாம்.மூச்சு தடையின்றி அமைதியுடன் நடைபெற வேண்டும். கண்கள் மூடியோ அல்லது பாதி திறந்தோ இருக்கலாம். பார்வையை மூக்கு நுனியிலோ, அல்லது புருவ மத்தியிலோ வைத்துக் கொண்டால் சிறப்பு. வசதிக்கேற்றவாறு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமரலாம்.
இந்த ஆசனத்தோடே சேர்த்து நாடி சுத்தியோ, பிராணாயாமமும் செய்தால் வெகு சிறப்பு. எனவே இரண்டையும் செய்து அழகு, ஆரோக்யம், வலிமை, ஆற்றல் பெறுங்கள்.
இந்த ஆசனத்தால் பல நன்மைகள் உண்டு. தேகம் ஆரோக்யமாக விளங்கும். ஞாபக சக்தி பெருகும். தேஜஸ் அதிகரிக்கும். முக்கியமாக விந்து கெட்டிப்படும். வீரியம் அதிகரிக்கும். விந்து ஸ்கலிதம், விந்து முந்துதல் போன்ற குறைகள் நிவர்த்தியாகும்.பாலுணர்வு சமன்படும். அதன் பிறகு நீங்கள் எந்த லேகியத்தையும் தேட வேண்டியதில்லை. இது மனதையும் அமைதிப்படுத்தி, பிராண அசைவை சீராக்கி அமைதியை அளிக்கும். பெண்களும் இந்த ஆசனத்தை செய்து மேன்மையுறலாம். உபநிஷத்துகளால் புகழப்பட்ட ஆசனங்களில் மிகவும் மேன்மையானதாகும்.

No comments:

Post a Comment