Monday, March 31, 2014

ஒரே எண்ணத்தில் போய் நிலைப்பதுதான் தியானம்

Photo: தியானத்தைப் பற்றிச் சொல்கிற பொழுது சில நுட்பங்களை நாம் உணர்ந்து கொள்வேமேயானால், நம்முடைய நிலைப்பாட்டை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தியான வழியில் நம் நிலை என்ன என்பதை அறியாத வரை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொதுவாக நம் மனதில் எண்ணங்கள் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி இருக்கிறது என்றால், கடலில் ஓயாது வந்து கொண்டேயிருக்கும் அலையைப் போல எண்ணங்கள் அலைஅலையாக வந்து கொண்டேயிருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால் கல்லைத் தூக்கி ஒரு தடாகத்தில் போட்டால் கரையை நோக்கி அலைகள் வட்டமாக தொடர்ந்து போய்க் கொண்டேயிருப்பது போல எண்ண அலைகள் இடைவிடாது நம் மனதில் இருந்து கிளம்பி, பரந்து, விரிந்து பிரபஞ்ச வெளியில் கலந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு எண்ண அலைக்கும் அதன் தொடர் அலைக்கும் உள்ள இடைவெளியை நம் மனம் உணர்வதில்லை. ஏனென்றால் அது மிகக் குறைவான காலமாக இருப்பதால் நம்மால் உணர முடிவதில்லை.

பிரத்தியாகாரம் மற்றும் தாரணையின் மூலம் எண்ணங்களைக் குறைத்து, ஒரு புள்ளியில் குவித்து அவற்றிற்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தி உணர்ந்து கொள்கிறோம். அவ்வாறு இடைவெளியை உணர்ந்து கொள்ளும் திறன் நமக்கு வாய்த்து விடுவதால், இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் வல்லமையும் நமக்கு வாய்த்து விடுகிறது. இப்படி இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி முற்றிலும் ஒரே எண்ணத்தில் போய் நிலைப்பதுதான் தியானம். இப்படி ஒரே எண்ணத்தை ஏற்படுத்தும் முறையை யோக சாஸ்திரம் பிரத்யயம் என்கிறது. எப்படி பல வார்த்தைகள் சேர்ந்து ஒரு வாக்கியமாக ஆகின்றதோ, அது போல எண்ண அலைகள் அனைத்தும் சேர்ந்து ஒரே எண்ணமாகப் பிரத்யயமாக ஆகின்றது. தியானத்தின் இந்தப் பிரத்யயத்திற்கு மூன்று உட்கூறுகள் உள்ளன. அவை, பொருள், பெயர், அறிவு என்பனவாம். அதாவது, அர்த்தம், சப்தம், ஞானம் என்பார்கள். ஒரு நபரைப் பார்க்கிறோம். முதலில் மனம் அந்த அர்த்தத்தை(பொருளை) ஏற்றுப் பதிவு செய்கிறது. பிறகு நாமோ, அல்லது வேறொருவரோ அது ராம் மனோகர் என்று (சப்தம்) பெயரைச் சொல்லும் பொழுது, எனக்கு அவரைத் தெரியும் என்ற அறிவு(ஞானம்) பிறக்கிறது. அதாவது சப்தம் போய் பொருளைப் பற்றிய அறிவை ஆன்மாவிற்கு உணர்த்துகிறது. வார்த்தைகளின்றி சிந்திக்கவே முடியாது என்பதால்தான் சப்தம் ப்ரம்மம் என்பார்கள்.

பொருள், சப்தம் அல்லது வார்த்தை, அறிவு இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு , காரணங்களால் எழும் எண்ண அலைகளால் உருவாகி இணைந்து ஒரு பிரத்யயமாக உருவெடுக்கிறது. சாதாரணமாக வெளியில் நம் சிந்தனையில் இந்த மூன்றும் சேர்ந்து ஒரு பிரத்யயமாகி விடுகின்றது. இது போலப் பல பிரத்யயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தியானம் என்கிற பொழுது அங்கு ஒரே ஒரு பிரத்யயம் மட்டுமே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது தியானம். இதற்காகவே ஆரம்பத்தில் ஒரு மந்திரத்தையும், இஷ்ட தெய்வத்தின் உருவத்தையும் தியானிக்கச் சொல்கிறார்கள். மனதில் ஒரே பிரத்யயத்தை நிலை பெறச் செய்ய ஒரே வார்த்தையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வேறு ஒரு எண்ணம் பிறந்து விடும். மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது இஷ்ட தெய்வத்தின் வடிவம் மட்டுமே அறிவில் தோன்றும். ஆரம்பத்தில் இதைத் தெளிவாக உணர முடியும். மந்திரத்தை நிறுத்தினால் இஷ்ட தெய்வத்தின் உருவமும் மறைந்து விடுவதோடு வேறு எண்ணங்கள் தோன்றுவதை உணரலாம். ஆனால், தியானத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு மந்திர ஜபத்தை நிறுத்தினாலும் வடிவம் சிறிது நேரம் மனத்திரையில் நிலைத்திருக்கும். மந்திரமானது எங்கும் போய் விடவில்லை அந்த உருவத்திலேயே கலந்து விடுகிறது. மந்திரம் எழுப்பிய எண்ண அலை இஷ்ட தெய்வம் எனும் பிரத்யயத்தில் கலந்து விடுகிறது. எனவே ஒரே ஒரு பிரத்யயம் மட்டும் நிலைத்து நின்று விடுகிறது. இதுவே தியானம்.

இந்த நிலை இன்னும் நீடிக்கும் பொழுது சமாதியாகிறது. தியானத்தில் சிறிதளவேனும் சுய முயற்சி தேவைப்பட்டது. சமாதியில் சுய முயற்சி எதுவுமின்றி தியானிக்கப்படும் பொருள் ஒளிரும். இதையே சப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். இன்னும் உயரும் பொழுது, இஷ்ட தெய்வமும் மறைந்து, மனம் தான் இருப்பதையே மறைந்த நிலையில் மூடப்பட்டு விடுகிறது. அப்பொழுது ஆன்மா மட்டுமே தன்னிலையில் தானாக இருக்கிறது. இதை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். நமது தனி மனம் என்பது பிரபஞ்ச மனதின் பகுதியே ஆதலால் அதில் மாற்றமற்ற இயக்கமற்ற நிலை என்பது இல்லவே இல்லை. ஆனால் அது என்றும் மாறாத ஆன்மாவைச் சார்ந்திருப்பதால் கட்டுப்பட்டு நிற்கிறது
தியானத்தைப் பற்றிச் சொல்கிற பொழுது சில நுட்பங்களை நாம் உணர்ந்து கொள்வேமேயானால், நம்முடைய நிலைப்பாட்டை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தியான வழியில் நம் நிலை என்ன என்பதை அறியாத வரை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொதுவாக நம் மனதில் எண்ணங்கள் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன. அது எப்படி இருக்கிறது என்றால், கடலில் ஓயாது வந்து கொண்டேயிருக்கும் அலையைப் போல எண்ணங்கள் அலைஅலையாக வந்து கொண்டேயிருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால் கல்லைத் தூக்கி ஒரு தடாகத்தில் போட்டால் கரையை நோக்கி அலைகள் வட்டமாக தொடர்ந்து போய்க் கொண்டேயிருப்பது போல எண்ண அலைகள் இடைவிடாது நம் மனதில் இருந்து கிளம்பி, பரந்து, விரிந்து பிரபஞ்ச வெளியில் கலந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு எண்ண அலைக்கும் அதன் தொடர் அலைக்கும் உள்ள இடைவெளியை நம் மனம் உணர்வதில்லை. ஏனென்றால் அது மிகக் குறைவான காலமாக இருப்பதால் நம்மால் உணர முடிவதில்லை.

பிரத்தியாகாரம் மற்றும் தாரணையின் மூலம் எண்ணங்களைக் குறைத்து, ஒரு புள்ளியில் குவித்து அவற்றிற்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தி உணர்ந்து கொள்கிறோம். அவ்வாறு இடைவெளியை உணர்ந்து கொள்ளும் திறன் நமக்கு வாய்த்து விடுவதால், இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் வல்லமையும் நமக்கு வாய்த்து விடுகிறது. இப்படி இடைவெளிக்கான நேரத்தை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி முற்றிலும் ஒரே எண்ணத்தில் போய் நிலைப்பதுதான் தியானம். இப்படி ஒரே எண்ணத்தை ஏற்படுத்தும் முறையை யோக சாஸ்திரம் பிரத்யயம் என்கிறது. எப்படி பல வார்த்தைகள் சேர்ந்து ஒரு வாக்கியமாக ஆகின்றதோ, அது போல எண்ண அலைகள் அனைத்தும் சேர்ந்து ஒரே எண்ணமாகப் பிரத்யயமாக ஆகின்றது. தியானத்தின் இந்தப் பிரத்யயத்திற்கு மூன்று உட்கூறுகள் உள்ளன. அவை, பொருள், பெயர், அறிவு என்பனவாம். அதாவது, அர்த்தம், சப்தம், ஞானம் என்பார்கள். ஒரு நபரைப் பார்க்கிறோம். முதலில் மனம் அந்த அர்த்தத்தை(பொருளை) ஏற்றுப் பதிவு செய்கிறது. பிறகு நாமோ, அல்லது வேறொருவரோ அது ராம் மனோகர் என்று (சப்தம்) பெயரைச் சொல்லும் பொழுது, எனக்கு அவரைத் தெரியும் என்ற அறிவு(ஞானம்) பிறக்கிறது. அதாவது சப்தம் போய் பொருளைப் பற்றிய அறிவை ஆன்மாவிற்கு உணர்த்துகிறது. வார்த்தைகளின்றி சிந்திக்கவே முடியாது என்பதால்தான் சப்தம் ப்ரம்மம் என்பார்கள்.

பொருள், சப்தம் அல்லது வார்த்தை, அறிவு இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு , காரணங்களால் எழும் எண்ண அலைகளால் உருவாகி இணைந்து ஒரு பிரத்யயமாக உருவெடுக்கிறது. சாதாரணமாக வெளியில் நம் சிந்தனையில் இந்த மூன்றும் சேர்ந்து ஒரு பிரத்யயமாகி விடுகின்றது. இது போலப் பல பிரத்யயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தியானம் என்கிற பொழுது அங்கு ஒரே ஒரு பிரத்யயம் மட்டுமே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது தியானம். இதற்காகவே ஆரம்பத்தில் ஒரு மந்திரத்தையும், இஷ்ட தெய்வத்தின் உருவத்தையும் தியானிக்கச் சொல்கிறார்கள். மனதில் ஒரே பிரத்யயத்தை நிலை பெறச் செய்ய ஒரே வார்த்தையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வேறு ஒரு எண்ணம் பிறந்து விடும். மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது இஷ்ட தெய்வத்தின் வடிவம் மட்டுமே அறிவில் தோன்றும். ஆரம்பத்தில் இதைத் தெளிவாக உணர முடியும். மந்திரத்தை நிறுத்தினால் இஷ்ட தெய்வத்தின் உருவமும் மறைந்து விடுவதோடு வேறு எண்ணங்கள் தோன்றுவதை உணரலாம். ஆனால், தியானத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு மந்திர ஜபத்தை நிறுத்தினாலும் வடிவம் சிறிது நேரம் மனத்திரையில் நிலைத்திருக்கும். மந்திரமானது எங்கும் போய் விடவில்லை அந்த உருவத்திலேயே கலந்து விடுகிறது. மந்திரம் எழுப்பிய எண்ண அலை இஷ்ட தெய்வம் எனும் பிரத்யயத்தில் கலந்து விடுகிறது. எனவே ஒரே ஒரு பிரத்யயம் மட்டும் நிலைத்து நின்று விடுகிறது. இதுவே தியானம்.

இந்த நிலை இன்னும் நீடிக்கும் பொழுது சமாதியாகிறது. தியானத்தில் சிறிதளவேனும் சுய முயற்சி தேவைப்பட்டது. சமாதியில் சுய முயற்சி எதுவுமின்றி தியானிக்கப்படும் பொருள் ஒளிரும். இதையே சப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். இன்னும் உயரும் பொழுது, இஷ்ட தெய்வமும் மறைந்து, மனம் தான் இருப்பதையே மறைந்த நிலையில் மூடப்பட்டு விடுகிறது. அப்பொழுது ஆன்மா மட்டுமே தன்னிலையில் தானாக இருக்கிறது. இதை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்பார்கள். நமது தனி மனம் என்பது பிரபஞ்ச மனதின் பகுதியே ஆதலால் அதில் மாற்றமற்ற இயக்கமற்ற நிலை என்பது இல்லவே இல்லை. ஆனால் அது என்றும் மாறாத ஆன்மாவைச் சார்ந்திருப்பதால் கட்டுப்பட்டு நிற்கிறது

பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ?


Photo: தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை
அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், " எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும்.
திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன,
அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார்.
இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். 
அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர்
அவருடைய அருட்புலம்பல்களில் சில:
என்னை மாயையினின்றும் நீக்கி ஆணவலக் கட்டை அறுத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து வைக்கும் தூக்கி திருவடியை வணங்கும் நாள் எந்நாளே?
கருப்கைக்கு இனிஇடம் காட்டாமல் எப்போதும் கருப்பூர மணம் வீசும் கடத்தப் பெருமானின் திருமுகத்தையேகண்டு என் குற்றத்தை ஒழிப்பது எந்நாளோ?
மண் முதலிய ஐந்து பாதங்களான உடலுடன் கூடி உலகில் அலைந்து வருந்திய துன்பம் ஒழிய பிரகணத்தலைவரான சிவபெருமானின் திருவருளை நாடும் நாள் எந்நாளே?
தீமை விளைவிக்கும் காரணமான பேராசையாம் புலைத்தொழிலியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் சேரும் நாள் எந்நாளே?
குருடனுக்கு உலகம் முழுவதும் இருள் மயமாக இருக்கும் அதுபோல என் அறிவில் ஆணவ தொடர்பால் விளைந்த அஞ்ஞான மயமாக இருட்கடல் வற்றிப் போவது எந்நாளோ?
உலகத் தொடர்புடன் ஆசையின்றி முற்றத் துறந்த சிவனாரும் செல்வம் பெற்ற நல்லதவததவரான பட்டினித்தாரும் அவருடைய மாணவரான பத்திரகிரயார் ஆகியோரின் பண்பை உணர்வது எந்நாளோ?
கண்ணால் கண்டவை நிலையில்லாமை என்றும், எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறிய சிவவாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?
காக்கை, நரி, செந்நாய், கழுகு என்ற இவை சுடுகாட்டில் கூட்டாக கூடி ஒரு நாள் தின்று ஏப்பம் இடுவதற்கு விருந்தாய் இருக்கும் இந்த உடலை "சீ" என்று வெறுப்பது எந்நாளோ.?
என் அறிவை ஐம்பொறிகளின் வழியே செல்லவிடாது அடக்கி என்னை போலவே மனித வடிவம் கொண்டுவந்த மவுன குருவின் திருவருள் நிறைவிலே அடியேன் கலந்திடும் நாள் எந்நாளோ?
கொடிய பிறப்பிணியை ஒழித்து உலகத்து அடியார்களை ஆட்கொள்ளும் ஞான அரசன் திருஞானசம்பந்தரின் திருவருளை பெறும் நாள் எந்நாளோ?
மயக்கும் மாதரால் மயங்கிய நிலைப்பற்றி அருட் புலம்பல்:
இளமைப் பருவத்தில் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கம் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாளோ?
கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்புசாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை நீங்குவது எந்நாளோ?
மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடை காட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கிக் கொள்ளுமாறு வீசும் மின்னல் போன்ற மங்கையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடைவது எந்நாளோ?
கற்கண்டின்னைப் போன்று இன்சொல்லைப் பேசி ஆடவரின் மனக்கருத்தை உணர்ந்து அடிமையாக்கும் மான் விழியுடைய மங்கையரின் நடிப்பை நீங்குவது எந்நாளோ?
விழிகளில் உண்டாகும் வெண்மையான பூழை மறைந்திட அறியாமையைத் தீட்டிய பெண்களின் மயக்கத்தினின்று தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ?
கரைவைத்த புடவையின் கொச்சத்தில் ஆடவரின் உள்ளத்தையெல்லாம் பிணித்து வைத்துக்கொள்ளும் வஞ்சத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாளோ?
ஆடவரின் வறுமையைக் காட்டி வஞ்சம் செய்யும் அணிகளைஅணிந்து மங்கையரிடத்து விருப்பம் என்ற பாழ் நிலத்தை நீக்கி பரமன் திருவருளான நிலத்ததில்வளர்ச்சி யடைவது எந்நாளோ?
ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச சேற்றில் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாளோ?
உடலில் உண்டாக்கின்ற தீய நாற்றம் அனைத்தையும் மஞ்சளை பூசி நாற்றத்தை மறைத்து பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ?
ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகப்பட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாளோ?
தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை
அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், " எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும்.
திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன,
அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார்.
இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும்.
அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர்
அவருடைய அருட்புலம்பல்களில் சில:
என்னை மாயையினின்றும் நீக்கி ஆணவலக் கட்டை அறுத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து வைக்கும் தூக்கி திருவடியை வணங்கும் நாள் எந்நாளே?
கருப்கைக்கு இனிஇடம் காட்டாமல் எப்போதும் கருப்பூர மணம் வீசும் கடத்தப் பெருமானின் திருமுகத்தையேகண்டு என் குற்றத்தை ஒழிப்பது எந்நாளோ?
மண் முதலிய ஐந்து பாதங்களான உடலுடன் கூடி உலகில் அலைந்து வருந்திய துன்பம் ஒழிய பிரகணத்தலைவரான சிவபெருமானின் திருவருளை நாடும் நாள் எந்நாளே?
தீமை விளைவிக்கும் காரணமான பேராசையாம் புலைத்தொழிலியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் சேரும் நாள் எந்நாளே?
குருடனுக்கு உலகம் முழுவதும் இருள் மயமாக இருக்கும் அதுபோல என் அறிவில் ஆணவ தொடர்பால் விளைந்த அஞ்ஞான மயமாக இருட்கடல் வற்றிப் போவது எந்நாளோ?
உலகத் தொடர்புடன் ஆசையின்றி முற்றத் துறந்த சிவனாரும் செல்வம் பெற்ற நல்லதவததவரான பட்டினித்தாரும் அவருடைய மாணவரான பத்திரகிரயார் ஆகியோரின் பண்பை உணர்வது எந்நாளோ?
கண்ணால் கண்டவை நிலையில்லாமை என்றும், எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறிய சிவவாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?
காக்கை, நரி, செந்நாய், கழுகு என்ற இவை சுடுகாட்டில் கூட்டாக கூடி ஒரு நாள் தின்று ஏப்பம் இடுவதற்கு விருந்தாய் இருக்கும் இந்த உடலை "சீ" என்று வெறுப்பது எந்நாளோ.?
என் அறிவை ஐம்பொறிகளின் வழியே செல்லவிடாது அடக்கி என்னை போலவே மனித வடிவம் கொண்டுவந்த மவுன குருவின் திருவருள் நிறைவிலே அடியேன் கலந்திடும் நாள் எந்நாளோ?
கொடிய பிறப்பிணியை ஒழித்து உலகத்து அடியார்களை ஆட்கொள்ளும் ஞான அரசன் திருஞானசம்பந்தரின் திருவருளை பெறும் நாள் எந்நாளோ?
மயக்கும் மாதரால் மயங்கிய நிலைப்பற்றி அருட் புலம்பல்:
இளமைப் பருவத்தில் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கம் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாளோ?
கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்புசாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை நீங்குவது எந்நாளோ?
மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடை காட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கிக் கொள்ளுமாறு வீசும் மின்னல் போன்ற மங்கையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடைவது எந்நாளோ?
கற்கண்டின்னைப் போன்று இன்சொல்லைப் பேசி ஆடவரின் மனக்கருத்தை உணர்ந்து அடிமையாக்கும் மான் விழியுடைய மங்கையரின் நடிப்பை நீங்குவது எந்நாளோ?
விழிகளில் உண்டாகும் வெண்மையான பூழை மறைந்திட அறியாமையைத் தீட்டிய பெண்களின் மயக்கத்தினின்று தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ?
கரைவைத்த புடவையின் கொச்சத்தில் ஆடவரின் உள்ளத்தையெல்லாம் பிணித்து வைத்துக்கொள்ளும் வஞ்சத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாளோ?
ஆடவரின் வறுமையைக் காட்டி வஞ்சம் செய்யும் அணிகளைஅணிந்து மங்கையரிடத்து விருப்பம் என்ற பாழ் நிலத்தை நீக்கி பரமன் திருவருளான நிலத்ததில்வளர்ச்சி யடைவது எந்நாளோ?
ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச சேற்றில் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாளோ?
உடலில் உண்டாக்கின்ற தீய நாற்றம் அனைத்தையும் மஞ்சளை பூசி நாற்றத்தை மறைத்து பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ?
ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகப்பட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாளோ?

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை இதுவே

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை

கடவுள் ஒருவரே அனைத்திற்கும் காரண கர்த்தா என்னும் கோட்பாட்டை நாம் புத்தகத்தில் படிக்கிறோம். பிறர் சொல்லக் கேட்கிறோம். நம்முடைய அனுபவத்தில் நாம் காணும் காட்சி இதுவன்று. முதலில் கடவுளை நாம் கண்டாகவேண்டும். கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை அனுபூதி வாயிலாகத் தெரிந்தாக வேண்டும். அதன் பிறகு இக்கேள்வியை விமர்சனம் செய்கிறவிடத்துக் கடவுளின் ஆணையின்றி இப்பிரபஞ்சத்தில் எதுவும் நிகழ்வதில்லை என்பது நமக்குக் கண்கூடாக விளங்கும்.

இப்பொழுது நாம் உள்ள நிலையில் நம் செயலுக்கு நாமே கர்த்தா. அவரவருடைய மனப்பான்மைக்கு ஏற்ப நாம் கர்மம் புரிந்து வருகின்றோம்.ஆற்றங்கரையில் சாது ஒருவர் உட்கார்ந்திருந்தார். பிரவாகத்தில் தேள் ஒன்று மிதந்து கொண்டு வந்தது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பற்றக் கையில் அள்ளி எடுத்தார். நீர் கீழே போன பிறகு கையிலிருந்த தேள் அவர் கையைக் கொட்டியது. உடனே கையை உதறினார். பழையபடி தேள் நீரில் விழுந்தது. திரும்பவும் அதன் மீது இரக்கம் கொண்டு நீரோடு அள்ளி அதை வெளியில் எடுத்தார். இரண்டாம் தடவை அது கொட்டியது. கையை உதறினார். தேள் தரையில் விழுந்து நகர்ந்து போய் விட்டது.

கஷ்டத்திலும் சாது தன் இயல்பைக் காட்டினார். காப்பாற்றப் பட்ட நிலையிலும் தேள் தன் இயல்பைக் காட்டியது. இங்கு அவரவர் செயலுக்கு அவரவர் கர்த்தா. தன் இயல்புக்கேற்பத் திருடன் களவாடுகிறான். கொலைபாதகன் மற்றவர்களைக் கொல்கிறான். நம் காட்சியில் வைத்துப் பார்க்குமிடத்து அவரவர் இயல்புக்கும் பரிபாகத்துக்கும் ஏற்ப உயிர்கள் நலன்களையும் கேடுகளையும் செய்து வருகின்றன.

பிரபஞ்சத்தின் நடைமுறை முழுவதையும் நாம் அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் எல்லாம் கடவுளின் திட்டமே, கடவுளின் விளையாட்டே. நல்ல நாடகம் ஒன்றில் விதவிதமான பாத்திரங்கள் இருக்க வேண்டும். நடிப்பவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்து விட்டால் நாடகத்தில் சுவை இராது. பிரபஞ்சம் என்கின்ற நாடகத்தில் எண்ணிறந்த இயல்புடைய உயிர்வகைகள் இருக்கின்றன. இந்தப் பெரிய திட்டத்தில் களவுக்கும், கொலைக்கும், வஞ்சகத்துக்கும், நோய்க்கும், பஞ்சத்துக்கும், போராட்டத்துக்கும் இடமுண்டு. சாந்தத்துக்கும், அன்புக்கும், ஜீவகாருண்யத்துக்கும் இங்கு இடமுண்டு. நலம், கேடுகள் ஆகிய எல்லாச் செயல்களுக்கும் ஈசுவர சிருஷ்டியில் இடமுண்டு; ரோஜாச் செடியில் அழகிய பூ இருப்பது போன்று கொடிய முள்ளும் இருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை இதுவே. கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்ச நடைமுறைக்கு அவைகள் முற்றிலும் அவசியமானவைகள். பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை. நமது முன்னேற்றத்துக்குத் தீமைகளும் மறைமுகமாகத் துணைபுரிகின்றன என்பதை நாம் அறிந்து கொண்டால், கொலைபாதகர்களைக் குறித்தோ, திருடர்களைக் குறித்தோ, வஞ்சகர்களைக் குறித்தோ நாம் மதிமயக்கம் கொள்ள மாட்டோம். அவர்களைக் கையாள்வது எப்படி என்பதிலும் தெளிவாக இருப்போம்.

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் என்ன!.. ஒரு ஒற்றுமை!.

சிவலிங்க வழிபாடு.

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது

உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

அறிவியலும் சித்தநெறியும் -

அறிவியலும் சித்தநெறியும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பீனல்சுரப்பி. பீனலின் சுரப்பி முதன்மையான சுரப்பி. பீனல்சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பீனல்சுரப்பி( pineal gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப்போவதை உங்களால் காண முடியும்.

படங்களும் அதன் விரிவாக்கமும் 

1. கோவிலின் அமைப்பு
2. பீனல்சுரப்பியின் வடிவம்
3.பீனல்சுரப்பி
4.மனித மூளையில் பீனல்சுரப்பியின் இடம் .
சிவலிங்க வழிபாடு.
உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது
உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.
அறிவியலும் சித்தநெறியும் -
அறிவியலும் சித்தநெறியும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது
லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.
கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.
ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.
மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பீனல்சுரப்பி. பீனலின் சுரப்பி முதன்மையான சுரப்பி. பீனல்சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.
பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பீனல்சுரப்பி( pineal gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.
பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப்போவதை உங்களால் காண முடியும்.
படங்களும் அதன் விரிவாக்கமும்
1. கோவிலின் அமைப்பு
2. பீனல்சுரப்பியின் வடிவம்
3.பீனல்சுரப்பி
4.மனித மூளையில் பீனல்சுரப்பியின் இடம் .

இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில்

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

மூச்சின் பல சூட்சுமங்கள்

Photo: நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம். எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. மருத்துவர் இழுத்து மூச்சுவிடு என்று ஸ்டெதாஸ்கோப்பை முதுகில் வைக்கும் போதுதான் நமக்கு மூச்சுவிடுவது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. நான் சொல்வது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் மூச்சுவடுவது பற்றிய சிந்தனையே இல்லாமல் பிறந்து, வளர்ந்து, இறந்து போனவர்களும் உண்டு. இழுத்துவிடும் மூச்சு நின்னாப் போச்சு என்பார்கள். ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு எத்தனை மூச்சு என்று தீர்மானிக்கப் பட்டிருக்கும், எனவே சுவாசத்தை இழுத்து மெதுவாக விட்டுப் பழகுவதால் பிராணசக்தி அதிகம் கிடைக்கும், ஆயுள் நீளும். 

இந்த மூச்சின் பல சூட்சுமங்கள் நம் முன்னோர்களால் நமக்கு திறந்து காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் நமக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நான் தியானம் கற்று பயிற்சி செய்யத் துவங்கிய காலத்தில், ஆர்வக் கோளாரு காரணமாக நடுஇரவில்கூட எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி கண்ணைமூடி உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த என் அறையில் என்னுடன் தங்கும் ஒரு சக தொழிலாளி, நீ காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் தியானம் செய். ஆனால் மூச்சை மறக்காமல் எப்போதும் எந்த வேலையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இரு. நன்றாக சிரமமில்லாமல் இழுத்து மெதுவாக விட்டு பழகி வா. நிறைய நன்மைகளைப் பெறுவாய். தியானமும் கைகூடும் என்றார். வேறு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். மேலும் மூச்சை கவனித்து பழக்கத்துக்கு கொண்டுவருவதற்கு சோம்பல் வேறு. ஆனால் சொன்னவர் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஸ்வாமிகள் என்ற சித்தரின் நேரடி சீடர். ஸ்வாமிகளின் ஸமாதிநிலைக்கு பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து பணி செய்து கொண்டிருந்தார். எனவே நானும் அவர் சொன்னபடியே செய்து வந்தேன். 

ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் விரைவில் பழக்கத்துக்கு வந்து விட்டது. கொஞ்சநாள் கழிந்த பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் போது காதில் வேகமாக காற்றடிப்பது போன்ற பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது. முதலில் பயந்துவிட்டேன். உறக்கம் நீங்கி கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு பார்த்தால் கண்ணை மூடிய சிறிது நேரத்திலேயே கேட்கும். ஆனால் தொடர்ந்து கேட்காது . ஒரு நொடிதான். சிறிது நாட்களில் வேறொரு அவஸ்த்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது என் இதயம் துடிப்பது எனக்கு கேட்கும். கண்விழித்து ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு அமர்ந்தால் சொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்பது படிப்படியாக மறைந்து விடும். சில நேரங்களில் மூச்சை மெதுவாக விடுகிறேன் பேர்வழி என்று அப்படியே உறங்கிப் போக, மூச்சுவிட மறந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அலறி அடித்துக் கொண்டு எழுவதும் உண்டு. காலையில் கண்விழித்தால் எதிரில் தெரியும் சுவரில் டீவிப் பெட்டியில் கேபிள் கட்டாகி விட்டால் தெரியுமே அதுபோல கொச கொசவென்று புள்ளிப் புள்ளியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரியும். சிறிது நேரம் கழித்து எழுந்து கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தால் சுவர் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. 

அந்த ஸ்வாமிகளின் சீடரே என்னிடம் ''ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று கேட்டார். நான் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அவர் சபாஷ் அருமையான முன்னேற்றம் தெரிகிறது என்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார். நாம் சொல்வதைச் சொன்னாலும் எல்லோரும் அதை கடைபிடிக்க மாட்டார்கள். அப்படியே கடைபிடித்தாலும் உறுதியாக நிலைக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படி அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். நாம் பிரச்சனையைச் சொன்னால்  இவர் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று நான் கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஆனால் அவர் அதை உணர்ந்து விட்டார். பளிச்சென்று  உனது இந்தக் கோபமும் கூடப் படிப்படியாகக் குறைந்து விடும் என்றார். பிறகு சொல்ல ஆரம்பித்தார். நீ சுவாசத்தை உற்று கவனித்து அதை முறையாக கையாள்வதாலே உன் உள் உணர்வு விழிப்பு நிலையை அடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இதெல்லாம். அந்த காதில் கேட்ட பேரிரைச்சல் வேறொன்றுமில்லை உன் இரத்த ஓட்டத்தின் சத்தமே, புலன் வழியே வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மனம் உள் முகமாக திரும்பியதால் உள் உணர்வுகள் கூர்மையாகி வருவதால்தான் உன் இதயத் துடிப்பை உன்னால் கேட்க முடிந்தது. மூச்சு மெதுவாக விடுவது என்கிற பழக்கம் இன்னும் முழுமைக்கு வரவில்லை மேலும் அனிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த சுவாசம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவேதான் இரவில் நீ தூங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவற்றில் நீ பார்த்தது அணுக்களின் அசைவையே . 

ஆனால் இவையெல்லாம் 30% வெற்றியே இன்னும் நீ முக்கால் கிணறு தாண்டியாக வேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு நீளக் கதை எதற்கென்றால்? சுவாசத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே. இதில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு காட்டுவாசிப் பெண் முதுகில் குழந்தையை தொங்கவிட்டு, அதில் அந்தக் குழந்தை முன் புறமாக கவிழ்ந்து தாடையை மார்பின் மேல் பகுதியில் அழுத்தியவாறு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு குழந்தையை தூக்கிக் கொண்டே அலைய வேண்டும் ? என்று கேட்டால். பல காரணங்களைச் சொன்னாலும், ஒரு காரணம் பளிச்சென்று என்மனதைத் தொட்டது. அதாவது முன் புறமாக கவிழ்ந்து தலையைத் தொங்கப் போட்டுத் தூங்கும் அந்தக் குழந்தையால் வாயால் சுவாசிக்கவே முடியாது. மூக்கால் மட்டுமே சுவாசிக்க முடியும். அதுவே பழக்கத்துக்கும் வந்துவிடும். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வாயால் சுவாசிக்காது என்றார்கள். சுவாசம் என்பது மூக்கால் மட்டுமே நடைபெற வேண்டும். ஏனென்றால் மூக்கில் மட்டுமே காற்றை வடிகட்டக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அப்படியே மீறி எதுவாவது உள்ளே போனால் தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினங்களும் வாய்திறந்து தூங்குவதில்லை. வாய்வழியாக சுவாசிப்பதுமில்லை. 

வாய்வழியாக சுவாசிப்பதனால் அசுத்த காற்று நுரையீரலை அடைவதுடன், காற்று குளிர்ச்சியடைந்து உள்ளே போவதால், சுவாச உறுப்புகள் வீக்கம் அடைகின்றன. தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுபவன் விழித்தெழும் போது வாயிலும், தொண்டையிலும் ஒரு எரிச்சலை உணர்வான். ஆனால் நாசி வழியாக காற்று உள்ளே போகும் போது உஷ்ணமாகிப் போவதால் சளி பிடிக்காது. வாயின் மூலம் மூச்சு விடுவதால் பல தொற்று நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. எனவே குழந்தையிலிருந்தே இந்த வாய் வழி மூச்சுவிடுவதைத் தவர்க்க நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்படி பழக்கம் இருப்பின் அதை மாற்ற வேண்டும். அதைப்போலவே ஒரு நாயைக்கவனித்துப் பார்த்தால், அது இரவில் தூங்காவிடினும் படுக்கும் போது இடது பக்கம் கீழிருக்கும் படி படுக்கும். பகலில் வலது பக்கம் கீழிருக்கும்படி படுக்கும். ஏனென்றால் பகலில் உஷ்ணமான நேரத்தில் இடது கலை ஓடினால் உடலில் உஷ்ணத்தின் தாக்கம் இருக்காது. இரவில் சூரியகலை ஓடினால் உடலில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்காது. அதாவது உஷணம் சமன்படுத்தப்படும். இதை நாய்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நம்மை எல்லோரும் இடது பக்கமாக படுங்கள் அதுதான் இதயத்துக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். அப்படி படுப்பதினால் உடல் அதிக உஷ்ணமடைந்து நோய்களுக்கு ஏதுவாகும். பகலில் தூங்கக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டோம். சரி, அப்படியே தூங்கினாலும் சரி, ஓய்வாக படுத்திருந்தாலும் சரி வலது பக்கம் கீழிருக்கும் படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் இடது பக்கம் கீழிருக்கும்படிக்கு படுத்துக் கொள்ளுங்கள். மேலும் சரியாக முழு மூச்சு வாங்கி விடுவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம். எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. மருத்துவர் இழுத்து மூச்சுவிடு என்று ஸ்டெதாஸ்கோப்பை முதுகில் வைக்கும் போதுதான் நமக்கு மூச்சுவிடுவது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. நான் சொல்வது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் மூச்சுவடுவது பற்றிய சிந்தனையே இல்லாமல் பிறந்து, வளர்ந்து, இறந்து போனவர்களும் உண்டு. இழுத்துவிடும் மூச்சு நின்னாப் போச்சு என்பார்கள். ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு எத்தனை மூச்சு என்று தீர்மானிக்கப் பட்டிருக்கும், எனவே சுவாசத்தை இழுத்து மெதுவாக விட்டுப் பழகுவதால் பிராணசக்தி அதிகம் கிடைக்கும், ஆயுள் நீளும்.

இந்த மூச்சின் பல சூட்சுமங்கள் நம் முன்னோர்களால் நமக்கு திறந்து காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் நமக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நான் தியானம் கற்று பயிற்சி செய்யத் துவங்கிய காலத்தில், ஆர்வக் கோளாரு காரணமாக நடுஇரவில்கூட எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி கண்ணைமூடி உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த என் அறையில் என்னுடன் தங்கும் ஒரு சக தொழிலாளி, நீ காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் தியானம் செய். ஆனால் மூச்சை மறக்காமல் எப்போதும் எந்த வேலையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இரு. நன்றாக சிரமமில்லாமல் இழுத்து மெதுவாக விட்டு பழகி வா. நிறைய நன்மைகளைப் பெறுவாய். தியானமும் கைகூடும் என்றார். வேறு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். மேலும் மூச்சை கவனித்து பழக்கத்துக்கு கொண்டுவருவதற்கு சோம்பல் வேறு. ஆனால் சொன்னவர் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஸ்வாமிகள் என்ற சித்தரின் நேரடி சீடர். ஸ்வாமிகளின் ஸமாதிநிலைக்கு பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து பணி செய்து கொண்டிருந்தார். எனவே நானும் அவர் சொன்னபடியே செய்து வந்தேன்.

ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் விரைவில் பழக்கத்துக்கு வந்து விட்டது. கொஞ்சநாள் கழிந்த பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் போது காதில் வேகமாக காற்றடிப்பது போன்ற பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது. முதலில் பயந்துவிட்டேன். உறக்கம் நீங்கி கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு பார்த்தால் கண்ணை மூடிய சிறிது நேரத்திலேயே கேட்கும். ஆனால் தொடர்ந்து கேட்காது . ஒரு நொடிதான். சிறிது நாட்களில் வேறொரு அவஸ்த்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது என் இதயம் துடிப்பது எனக்கு கேட்கும். கண்விழித்து ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு அமர்ந்தால் சொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்பது படிப்படியாக மறைந்து விடும். சில நேரங்களில் மூச்சை மெதுவாக விடுகிறேன் பேர்வழி என்று அப்படியே உறங்கிப் போக, மூச்சுவிட மறந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அலறி அடித்துக் கொண்டு எழுவதும் உண்டு. காலையில் கண்விழித்தால் எதிரில் தெரியும் சுவரில் டீவிப் பெட்டியில் கேபிள் கட்டாகி விட்டால் தெரியுமே அதுபோல கொச கொசவென்று புள்ளிப் புள்ளியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரியும். சிறிது நேரம் கழித்து எழுந்து கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தால் சுவர் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது.

அந்த ஸ்வாமிகளின் சீடரே என்னிடம் ''ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று கேட்டார். நான் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அவர் சபாஷ் அருமையான முன்னேற்றம் தெரிகிறது என்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார். நாம் சொல்வதைச் சொன்னாலும் எல்லோரும் அதை கடைபிடிக்க மாட்டார்கள். அப்படியே கடைபிடித்தாலும் உறுதியாக நிலைக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படி அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். நாம் பிரச்சனையைச் சொன்னால் இவர் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று நான் கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஆனால் அவர் அதை உணர்ந்து விட்டார். பளிச்சென்று உனது இந்தக் கோபமும் கூடப் படிப்படியாகக் குறைந்து விடும் என்றார். பிறகு சொல்ல ஆரம்பித்தார். நீ சுவாசத்தை உற்று கவனித்து அதை முறையாக கையாள்வதாலே உன் உள் உணர்வு விழிப்பு நிலையை அடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இதெல்லாம். அந்த காதில் கேட்ட பேரிரைச்சல் வேறொன்றுமில்லை உன் இரத்த ஓட்டத்தின் சத்தமே, புலன் வழியே வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மனம் உள் முகமாக திரும்பியதால் உள் உணர்வுகள் கூர்மையாகி வருவதால்தான் உன் இதயத் துடிப்பை உன்னால் கேட்க முடிந்தது. மூச்சு மெதுவாக விடுவது என்கிற பழக்கம் இன்னும் முழுமைக்கு வரவில்லை மேலும் அனிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த சுவாசம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவேதான் இரவில் நீ தூங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவற்றில் நீ பார்த்தது அணுக்களின் அசைவையே .

ஆனால் இவையெல்லாம் 30% வெற்றியே இன்னும் நீ முக்கால் கிணறு தாண்டியாக வேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு நீளக் கதை எதற்கென்றால்? சுவாசத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே. இதில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு காட்டுவாசிப் பெண் முதுகில் குழந்தையை தொங்கவிட்டு, அதில் அந்தக் குழந்தை முன் புறமாக கவிழ்ந்து தாடையை மார்பின் மேல் பகுதியில் அழுத்தியவாறு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு குழந்தையை தூக்கிக் கொண்டே அலைய வேண்டும் ? என்று கேட்டால். பல காரணங்களைச் சொன்னாலும், ஒரு காரணம் பளிச்சென்று என்மனதைத் தொட்டது. அதாவது முன் புறமாக கவிழ்ந்து தலையைத் தொங்கப் போட்டுத் தூங்கும் அந்தக் குழந்தையால் வாயால் சுவாசிக்கவே முடியாது. மூக்கால் மட்டுமே சுவாசிக்க முடியும். அதுவே பழக்கத்துக்கும் வந்துவிடும். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வாயால் சுவாசிக்காது என்றார்கள். சுவாசம் என்பது மூக்கால் மட்டுமே நடைபெற வேண்டும். ஏனென்றால் மூக்கில் மட்டுமே காற்றை வடிகட்டக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அப்படியே மீறி எதுவாவது உள்ளே போனால் தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினங்களும் வாய்திறந்து தூங்குவதில்லை. வாய்வழியாக சுவாசிப்பதுமில்லை.

வாய்வழியாக சுவாசிப்பதனால் அசுத்த காற்று நுரையீரலை அடைவதுடன், காற்று குளிர்ச்சியடைந்து உள்ளே போவதால், சுவாச உறுப்புகள் வீக்கம் அடைகின்றன. தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுபவன் விழித்தெழும் போது வாயிலும், தொண்டையிலும் ஒரு எரிச்சலை உணர்வான். ஆனால் நாசி வழியாக காற்று உள்ளே போகும் போது உஷ்ணமாகிப் போவதால் சளி பிடிக்காது. வாயின் மூலம் மூச்சு விடுவதால் பல தொற்று நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. எனவே குழந்தையிலிருந்தே இந்த வாய் வழி மூச்சுவிடுவதைத் தவர்க்க நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்படி பழக்கம் இருப்பின் அதை மாற்ற வேண்டும். அதைப்போலவே ஒரு நாயைக்கவனித்துப் பார்த்தால், அது இரவில் தூங்காவிடினும் படுக்கும் போது இடது பக்கம் கீழிருக்கும் படி படுக்கும். பகலில் வலது பக்கம் கீழிருக்கும்படி படுக்கும். ஏனென்றால் பகலில் உஷ்ணமான நேரத்தில் இடது கலை ஓடினால் உடலில் உஷ்ணத்தின் தாக்கம் இருக்காது. இரவில் சூரியகலை ஓடினால் உடலில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்காது. அதாவது உஷணம் சமன்படுத்தப்படும். இதை நாய்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நம்மை எல்லோரும் இடது பக்கமாக படுங்கள் அதுதான் இதயத்துக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். அப்படி படுப்பதினால் உடல் அதிக உஷ்ணமடைந்து நோய்களுக்கு ஏதுவாகும். பகலில் தூங்கக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டோம். சரி, அப்படியே தூங்கினாலும் சரி, ஓய்வாக படுத்திருந்தாலும் சரி வலது பக்கம் கீழிருக்கும் படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் இடது பக்கம் கீழிருக்கும்படிக்கு படுத்துக் கொள்ளுங்கள். மேலும் சரியாக முழு மூச்சு வாங்கி விடுவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

ஆல்பா தியானம்

Photo: தியா என்றால் ஒளி, விளக்கு, பிரகாசம் என்று பொருள். அயானம் என்றால் சுபாவம், இயற்கை அல்லது இயல்பு என்று பொருள். ஒளியை இயல்பாக உடைய ஆன்மாவை அடைதல் அல்லது ஒளியை இயல்பாக அடைதல் என்பதே பொருள். பரம்பொருளாகிய இறைவன் ஒளிமயமானவர் என்று அனைத்து மதங்களும் சொல்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். எனவே பொதுவான பொருள் என்னவென்றால் நம் இயல்பான சுபாவமான ஒளியை அடைதல் என்பதே. ஆன்மாவை விட்டு விலகி இருப்பது அஞ்ஞானமாகிய இருளாகும். ஆன்ம ஒளி நம் அறிவில் பிரகாசிப்பது ஞானமாகும். உலகில் மற்ற எல்லா இடங்களிலும் ஜெபம், பிரார்த்தனை மூலமாகவே ஒளியாகிய இறைவனை அடைய முயற்சி செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் தோன்றிய ரிஷிகளே மனதை ஒடுக்கி அதன் மூலம் தியானத்தை அடையும் உபாயத்தை கண்டறிந்து கடைபிடித்திருக்கிறார்கள்.  ஆனால் இன்று மேல் நாட்டினர் கூட நம் தியானத்தின் அருமையை உணர்ந்து அதை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். 

இதைக்குறித்து அவர்கள் நிறையவே ஆராய்ச்சி செய்கிறார்கள். தியானம் செய்யும் போது உடல் ஆரோக்யத்திற்கும், மன ஆரோக்யத்திற்கும் உகந்த அலைகள் நம் உடலில் உருவாகி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த அலைகள் மூளையிலிருந்து உருவாகி எழுவதையும் கண்டுபிடித்துள்ளனர். மூளையில் இருந்து உருவாகும் அலையை அவர்கள் நான்காக வகைப்படுத்தியுள்ளனர்.
டெல்டா - 0.5 to 4 Hz/Sec. இந்த அலை ஆழ்ந்த தூக்கத்தின் போது உருவாவது.
தீட்டா - 4 to 7 Hz. இந்த அலை கனவுநிலையில் தோன்றுவது.
ஆல்பா - 8 to13 Hz. இந்த அலை தியானத்தின் போது தோன்றுவது. இந்த அலைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்க முடிகிறது.
பீட்டா - 13 to 30 Hz. இந்த அலை ஆழ்ந்த தியானத்தில் தோன்றுவது. இதுவும் சக்திவாய்ந்த அலையாகும்.
தியானம் செய்யும் போது இந்த ஆல்பா அலை உருவாவதையும், பின்னர் விழித்த பிறகும் தொடர்ந்து இந்த அலை வந்து கொண்டே இருப்பதையும் கண்டு பிடித்துள்ளனர். தன்னை அறிவதற்கும், சுய முன்னேற்றத்திற்கும் உதவுவனவாக இந்த ஆல்பா அலைகள் இருப்பதை கண்டறிந்தனர். கண்ணைத் திறந்து தியானம் செய்தால் இடது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும், கண்ணைமூடி தியானம் செய்தால் வலது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும் கண்டனர். பீனியல் சுரப்பி நன்றாக செயல்படுவதையும் கண்டு சொல்லியிருக்கிறார்கள். முதன் முதலில் மனித மூளையில் அலை உருவாவதை கான்ஸ் பர்ஜர் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். இந்த அலைகளை அளக்க 'இலக்ட்ரோ செபலோகிராபி' என்ற இயந்திரத்தை பயன்படுத்தினர். தியானத்தால் ஆன்மீக சக்தி வளர்வதோடு, ஆரோக்யமும், மனவளமும் மேம்படுவதை விஞ்ஞானமும் இப்போது ஒத்துக் கொள்கிறது. 

சகல நோய்களும் மன வித்தியாசத்தால் உருவாகின்றன என்றும் மனநிலை மாற்றத்தால் அவைகளை குணப்படுத்தமுடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை மாற்றம் என்கிற பொழுது மனதில் எழும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து எப்பொழுதும் பரபரப்பாகக் கடல் அலைகளைப் போலக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனதை அமைதியடையச் செய்வதேயாகும். எனவே முதலில் புலன்களில் வழியே கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரியும் மனதைப் பிரித்து உள் முகமாகத் திருப்பி விட வேண்டியது அவசியமாகும். பிறகு உள் முகமாகத் திரும்பிய மனதை ஒரு புள்ளியில் குவிப்பது அடுத்த கட்டமாகும். இதற்காக முதலில் வெளி முகமான பயிற்சி அவசியமாகும். இதற்காக தீபம், சுவற்றில் உள்ள சிறிய புள்ளி மற்றும் கண்ணாடிப் பயிற்சிகள் மேற்கொள்வது எளிதில் மனதின் குவிந்த நிலையை உருவாக்கித் தரும். இதைத் தாரணை என்று சொல்வார்கள். பொதுவாக தற்காலங்களில் நமக்குத் தரப்படும் தியானப் பயிற்சிகள் அனைத்துமே தாரணைதான். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் தியானம் என்பது ஒரு பாதையோ, நெறியோ அல்ல. அதையெல்லாம் கடந்த ஒரு நிலை. மனதில் எழுகின்ற எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற முயற்சி தாரணை என்றால், தியானத்தில் எந்த முயற்சியும் கிடையாது என்பதை உணருங்கள்.      
எனவே தியானம் என்பது உயரிய நிலை என்பதை உணர்ந்து, கடைபிடித்து உய்வோமாக.
தியா என்றால் ஒளி, விளக்கு, பிரகாசம் என்று பொருள். அயானம் என்றால் சுபாவம், இயற்கை அல்லது இயல்பு என்று பொருள். ஒளியை இயல்பாக உடைய ஆன்மாவை அடைதல் அல்லது ஒளியை இயல்பாக அடைதல் என்பதே பொருள். பரம்பொருளாகிய இறைவன் ஒளிமயமானவர் என்று அனைத்து மதங்களும் சொல்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். எனவே பொதுவான பொருள் என்னவென்றால் நம் இயல்பான சுபாவமான ஒளியை அடைதல் என்பதே. ஆன்மாவை விட்டு விலகி இருப்பது அஞ்ஞானமாகிய இருளாகும். ஆன்ம ஒளி நம் அறிவில் பிரகாசிப்பது ஞானமாகும். உலகில் மற்ற எல்லா இடங்களிலும் ஜெபம், பிரார்த்தனை மூலமாகவே ஒளியாகிய இறைவனை அடைய முயற்சி செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் தோன்றிய ரிஷிகளே மனதை ஒடுக்கி அதன் மூலம் தியானத்தை அடையும் உபாயத்தை கண்டறிந்து கடைபிடித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மேல் நாட்டினர் கூட நம் தியானத்தின் அருமையை உணர்ந்து அதை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதைக்குறித்து அவர்கள் நிறையவே ஆராய்ச்சி செய்கிறார்கள். தியானம் செய்யும் போது உடல் ஆரோக்யத்திற்கும், மன ஆரோக்யத்திற்கும் உகந்த அலைகள் நம் உடலில் உருவாகி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த அலைகள் மூளையிலிருந்து உருவாகி எழுவதையும் கண்டுபிடித்துள்ளனர். மூளையில் இருந்து உருவாகும் அலையை அவர்கள் நான்காக வகைப்படுத்தியுள்ளனர்.
டெல்டா - 0.5 to 4 Hz/Sec. இந்த அலை ஆழ்ந்த தூக்கத்தின் போது உருவாவது.
தீட்டா - 4 to 7 Hz. இந்த அலை கனவுநிலையில் தோன்றுவது.
ஆல்பா - 8 to13 Hz. இந்த அலை தியானத்தின் போது தோன்றுவது. இந்த அலைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்க முடிகிறது.
பீட்டா - 13 to 30 Hz. இந்த அலை ஆழ்ந்த தியானத்தில் தோன்றுவது. இதுவும் சக்திவாய்ந்த அலையாகும்.
தியானம் செய்யும் போது இந்த ஆல்பா அலை உருவாவதையும், பின்னர் விழித்த பிறகும் தொடர்ந்து இந்த அலை வந்து கொண்டே இருப்பதையும் கண்டு பிடித்துள்ளனர். தன்னை அறிவதற்கும், சுய முன்னேற்றத்திற்கும் உதவுவனவாக இந்த ஆல்பா அலைகள் இருப்பதை கண்டறிந்தனர். கண்ணைத் திறந்து தியானம் செய்தால் இடது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும், கண்ணைமூடி தியானம் செய்தால் வலது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும் கண்டனர். பீனியல் சுரப்பி நன்றாக செயல்படுவதையும் கண்டு சொல்லியிருக்கிறார்கள். முதன் முதலில் மனித மூளையில் அலை உருவாவதை கான்ஸ் பர்ஜர் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். இந்த அலைகளை அளக்க 'இலக்ட்ரோ செபலோகிராபி' என்ற இயந்திரத்தை பயன்படுத்தினர். தியானத்தால் ஆன்மீக சக்தி வளர்வதோடு, ஆரோக்யமும், மனவளமும் மேம்படுவதை விஞ்ஞானமும் இப்போது ஒத்துக் கொள்கிறது.

சகல நோய்களும் மன வித்தியாசத்தால் உருவாகின்றன என்றும் மனநிலை மாற்றத்தால் அவைகளை குணப்படுத்தமுடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை மாற்றம் என்கிற பொழுது மனதில் எழும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து எப்பொழுதும் பரபரப்பாகக் கடல் அலைகளைப் போலக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனதை அமைதியடையச் செய்வதேயாகும். எனவே முதலில் புலன்களில் வழியே கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரியும் மனதைப் பிரித்து உள் முகமாகத் திருப்பி விட வேண்டியது அவசியமாகும். பிறகு உள் முகமாகத் திரும்பிய மனதை ஒரு புள்ளியில் குவிப்பது அடுத்த கட்டமாகும். இதற்காக முதலில் வெளி முகமான பயிற்சி அவசியமாகும். இதற்காக தீபம், சுவற்றில் உள்ள சிறிய புள்ளி மற்றும் கண்ணாடிப் பயிற்சிகள் மேற்கொள்வது எளிதில் மனதின் குவிந்த நிலையை உருவாக்கித் தரும். இதைத் தாரணை என்று சொல்வார்கள். பொதுவாக தற்காலங்களில் நமக்குத் தரப்படும் தியானப் பயிற்சிகள் அனைத்துமே தாரணைதான். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் தியானம் என்பது ஒரு பாதையோ, நெறியோ அல்ல. அதையெல்லாம் கடந்த ஒரு நிலை. மனதில் எழுகின்ற எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற முயற்சி தாரணை என்றால், தியானத்தில் எந்த முயற்சியும் கிடையாது என்பதை உணருங்கள்.
எனவே தியானம் என்பது உயரிய நிலை என்பதை உணர்ந்து, கடைபிடித்து உய்வோமாக.

Saturday, March 29, 2014

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும் பகவானை நோக்கியா?


Photo: அகங்காரம் வெந்து சாம்பலாகும்

ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது, அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில் அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும் பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான், விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான், காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,

இப்படிப்பட்ட பூஜையும். பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில் ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், 

அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது, படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால் அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப் போகவேண்டியதுதான்.

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில் உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்.
ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப் பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது, அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்கு உள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில் அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும் பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான், விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான், காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,

இப்படிப்பட்ட பூஜையும். பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில் ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும்,

அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது, படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால் அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப் போகவேண்டியதுதான்.

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில் உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்.

இதை தான் கடவுள் விரும்புகிறாரா?


Photo: நாத்திக செருப்புகளை கழற்றி விடு!

பகுத்தறிவுவாதிகள் என தங்களை தாங்களே அழைத்து கொள்ளும் நாத்திக வாதிகள் ஆலயம் சென்று இறைவனை தொழுவதும் நெஞ்சம் உருக வேண்டுதல் செய்வதும் முட்டாள் தனமான காரியம் என சொல்கிறார்கள்

இன்னும் மறைக்காமல் உண்மையை உடைத்து சொன்னால் கடவுளை வணங்கும் அனைவருமே காட்டு மிராண்டிகள் என்பது அவர்களின் வாதம்

மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, சதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது. பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள்.

உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.

மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக்கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான்.

அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும்.

கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?

இதை தான் கடவுள் விரும்புகிறாரா? என்று சுலபமாக கேட்டு விடலாம்

பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும்.

நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது.

கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான். இது அவனது ஆணவத்தின் வெளிபாடு.

பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை. கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான்.

அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்

ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் ஏன் பைபிள், கூர்-ஆனை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க முடியவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்ல

பக்திமான் என்று சொல்லி கொள்கிறவர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்

அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாகயிருக்கிறது.

கவியரசு கண்ணதாசனால் நாத்திகவாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை.

நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.

நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல. ஆன்மிகமாகும்.

வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல. மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவே யாகும்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் அரண்மனையில் வாழாமல் குடிசையில் வாழ்ந்தது மாசேதுங் அல்ல, முகமது நபியே ஆகும்.

பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.

எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.

எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும்.

பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.
பகுத்தறிவுவாதிகள் என தங்களை தாங்களே அழைத்து கொள்ளும் நாத்திக வாதிகள் ஆலயம் சென்று இறைவனை தொழுவதும் நெஞ்சம் உருக வேண்டுதல் செய்வதும் முட்டாள் தனமான காரியம் என சொல்கிறார்கள்

இன்னும் மறைக்காமல் உண்மையை உடைத்து சொன்னால் கடவுளை வணங்கும் அனைவருமே காட்டு மிராண்டிகள் என்பது அவர்களின் வாதம்

மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, சதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது. பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள்.

உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.

மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக்கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான்.

அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும்.

கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?

இதை தான் கடவுள் விரும்புகிறாரா? என்று சுலபமாக கேட்டு விடலாம்

பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும்.

நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது.

கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான். இது அவனது ஆணவத்தின் வெளிபாடு.

பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை. கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான்.

அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்

ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் ஏன் பைபிள், கூர்-ஆனை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க முடியவில்லை.

அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்ல

பக்திமான் என்று சொல்லி கொள்கிறவர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்

அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாகயிருக்கிறது.

கவியரசு கண்ணதாசனால் நாத்திகவாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை.

நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.

நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல. ஆன்மிகமாகும்.

வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல. மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவே யாகும்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் அரண்மனையில் வாழாமல் குடிசையில் வாழ்ந்தது மாசேதுங் அல்ல, முகமது நபியே ஆகும்.

பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.

எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.

எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும்.

பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.

என்னை எதிர்த்து செயல்பட்டவருக்கு, கடவுள் ஆசி வழங்கவேண்டுவேன்.

* உடற்பயிற்சி செய்தால் உடல் முழுவதும் நல்ல மாற்றங்கள் உண்டாகின்றன. சுமார் 30 நிமிடங்களி ருந்து 60 நிமிடங்கள் வரை சுறுசுறுப்பாக நடந்தால் உடல் எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து உடல் முழுவதையும் இயல்பான செயல் நிலைக்கு மாற்றுகிறது. மேலும் மனஅழுத்தத்தினால் அளவிற்கதிகமான சுரக்கின்ற அன்ரீனன், கார்டிசால் போன்ற ஹார்மோன் களின் விளைவுகள் உடன் சக்திகளாக மாற்றப் படுகின்றன.
* யோகப் பயிற்சிகள் : நமது உடல் இரண்டு வகையான நரம்புகள் உள்ளன. சிம்பதடிக் எனப்படுகிற நரம்புகள் கோபம், பயம், பதட்டம், ஆவேசம் போன்ற உணர்வுகளை அதிகரிக்கிறது. பாராசிம்பதடிக் நரம்புகள் அன்பு, அமைதி, பொறுமை, தெளிவு போன்றஉணர்வுகளை அதிகரிக்கிறது. யோகப் பயிற்சிகளின் மூலம் சிம்பதடிக் நரம்புகளின் செயல்பாடுகள் குறைக்கப் பட்டு, பாராசிம்பதடிக் நரம்புகள் அதிகமாகச் செயல்படுகின்றன. இதனால் மன அழுத்தம் தாமாகக் குறையும்.
* உணவு முறைகளில் சைவ உணவுகள், குறைந்த உப்பு மற்றும் கார உணவுகள் நல்லது. அசைவ உணவை சாப்பிடுவோர் வேகவைத்த மீன் மட்டும் சாப்பிடலாம்.
* காலை எழுந்ததும் இரவு படுக்கும்போதும் நல்ல புத்தகங்களை படிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* மெல்சைக்கு குறிப்பாக புல்லாங்குழல் இசைக்கு மன அமைதியைத் தருகிற பலன் உண்டு.
* தியானம் என்பது மனதை தளரச் செய்வது. சுமார் 15 நிமிடங்கள் கண்ணைமூடி எதையும் சிந்திக்காமல், அமைதியாக சாய்ந்து அமர்ந்து தியானம் செய்யலாம். இதனால் மூளைச் செல்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* தனிமையைத் தவிர்த்து, நல்ல நண்பர் களுடன் (அ) உறவினர்களுடன் மனம் விட்டு பழகுதல் மன அழுத்தத்தை தவிர்க்கும்.
இன்னும் சில செயல்முறைகள்
(மன அமைதிக்கான உறுதி மொழி)
1.யாராவது என்னிடம் பொறுமையின்றி, ஆவேசமாக செயல்பட்டால், அதனால் புண் படாமல் செயல்படுவேன்.
2. என்னை எதிர்த்து செயல்பட்டவருக்கு, கடவுள் ஆசி வழங்கவேண்டுவேன்.
3. ஐந்து நிமிடங்களுக்க அமைதியாக கடவுளிடம் வேண்டுதல் செய்வேன்.
4. நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து, வீண்பேச்சுகளை தவிர்த்து, நல்லவற்றையே பேசுவேன்.
5. அளவான சரியான உணவை மட்டும் உண்பேன். என்னை நலமாக வைத்த கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
6. யாராவது ஒருவருடைய கஷ்டங்களை பகிர்ந்து கெள்வேன்.
7. மனமுடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவருக்கு நல்ல வார்த்தைகளால் அல்லது செயல்களால் உற்சாகப்படுத்துவேன்.
8. எனக்கு கெடுதல் செய்பவரை மன்னிப்பேன்.
9. மற்றவர்கள் எப்படி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேனோ, அதையே நான் மற்றவர்களிடம் செய்வேன்.
10. பிரதிபலன் எதிர்பாராமல் என்னால் முடிந்த உதவியை முன்பின் தெரியாத மனிதருக்குச் செய்வேன்.

ஐயா, ஆஸ்திகம், நாஸதிகம் பற்றித் தெளிவு படுத்த முடியுமா ?


Photo: Raja Rajan _ ஐயா, ஆஸ்திகம், நாஸதிகம் பற்றித் தெளிவு படுத்த முடியுமா ?

Ram Manoharநம் நிலையான சொத்து எது ? நமக்கு என்றென்றும் உரிமையான சொத்து எது ? அது நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. இங்கு நாம் பெற்றுள்ள ஆஸ்திகளை இருக்கும் வரை அனுபவிக்கலாம். சில வேளைகளில் இருக்கும் பொழுதே கூட அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இது நிலையானதல்ல. என்றும் நிலையான, அழியாத சொத்து எது என்று மனதால் தேடுவது ஆஸ்திகம். அந்த சொத்து அல்லது செல்வம்  நமக்கு உள்ளே இருக்கிறது என்றும் பொருள் கூறலாம். பொதுவாக அழிவற்ற ஆன்மாவை மனதால் அடைய முயற்சிப்பது ஆஸ்திகம். இது ஒரு வகையான முயற்சி. நாஸ்தி என்றால் அழிவு என்று பொருள். இது எந்த மொழி என்று எனக்குத் தெரியாது. ஆனால், சென்னையிலிருக்கும் பொழுது அடிக்கடி கேட்டிருக்கிறேன். எல்லாம் நாஸ்தியாப் போச்சுப்பா என்று அழிந்து போன அல்லது வீணாய்ப்போனதைக் குறித்து அவ்வாறு சொல்வார்கள். கூர்ந்து கவனித்தால் இதில் இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன. அதாவது என்றும் அழியாத கடவுளை விடுத்து அல்லது மறந்து அல்லது மறுத்து அழியக் கூடிய இந்தப் பிரபஞ்ச பொருட்களைப் பெரிதாகக் கருதிக் கொண்டு செயல்படுவது அல்லது வாழ்வது நாஸ்திகம் எனலாம். இன்னும் ஒரு கருத்து என்னவென்றால் அகம் என்றால் உள்ளே அதாவது உள்ளம் அல்லது மனம் என்று பொருள். மனதை நாஸ்தி செய்து அதாவது மனதை அழித்து என்றும் அழியாத பரம்பொருளை அடைவது நாஸ்திகம். சித்தர்கள் மனதற்ற நிலையைப் பற்றி பேசுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். அதாவது எல்லாமே கடவுள்தான். எனவே இங்கு காணும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு மனதால் தெளிந்து என்றும் அழியாத ஆஸ்தியாகிய பரம்பொருளை அடைவது ஆஸ்திகம். பரம்பொருளை நாம் அடைவதற்குத் தடையாக இருப்பதே இந்தப் பொருள்களும், அவற்றின் மீது கொள்ளும் பற்றுகளே ஆகும். எனவே இந்தஅழியக் கூடிய பொருள் மீது பற்று கொள்ளும் மனதை அழித்து விட்டால் நாம் பரம்பொருளை அடைந்து விடலாம் என்பது நாஸ்திகம். அதாவது அகத்தை அழித்து விடுவது. முன்னது பக்தி, பின்னது யோகம். இரண்டுமே ஞானத்தைத் தந்து முக்தியை அடையச் செய்யும். 

இது பற்றி காஞ்சி மகா பெரியவர் சொல்வது என்னவென்றால், அஸதி என்றால் இருப்பது. ஒரு காலத்திலோ, தேசத்திலோ, ஒரு பொருளிலோ மாத்திரமல்லாமல் எல்லாவற்றிலும் இருக்கிற வஸ்து எதுவோ அதுவே அஸ்தி. அதுவே பரம்பொருள். எனவே ஆஸ்திகன் என்றால் பரம்பொருள் ஞானம் உடையவன் அல்லது பரம்பொருளை நம்புபவன். இதில் நம்பிக்கையற்றவர்கள் நாஸ்திகன். அதாவது பரம்பொருளை மனதால் நம்புபவன் ஆஸ்திகன். பரம்பொருள் மீது நம்பிக்கையற்றவன் நாஸ்திகன். அவர் சொல்வது படிப் பார்த்தால் எந்தப் பொருளுமே இந்த உலகில் அழிவதில்லை. தன் வியக்தியை, தன் குணத்தை, தன் வடிவத்தை இழந்து புதிய நிலையை அடைகிறது. பழைய வியக்தியை அழிந்து போக புதிய வியக்தியை எடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்படி பிரபஞ்சச் சக்கரத்தில் உழன்று கொண்டேயிருக்கக் காரணம் மனதில் பரம்பொருள் பற்றிய நம்பிக்கையோ, ஆன்மத் தெளிவோ அற்றிருப்பதுதான். அவனே நாஸ்திகன்.மனதால் பரம்பொருளைப் பற்றி, ஆன்மத் தெளிவாகிய பரஞானம் அடையும் முயற்சியை உடையவன் ஆஸ்திகன். அவனே என்றும் அழியாத சொத்தாகிய நம் சொந்த வீடாகிய வீடு பேற்றை அடைவான் என்பது கருத்து.
நம் நிலையான சொத்து எது ? நமக்கு என்றென்றும் உரிமையான சொத்து எது ? அது நிச்சயமாக இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. இங்கு நாம் பெற்றுள்ள ஆஸ்திகளை இருக்கும் வரை அனுபவிக்கலாம். சில வேளைகளில் இருக்கும் பொழுதே கூட அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே இது நிலையானதல்ல. என்றும் நிலையான, அழியாத சொத்து எது என்று மனதால் தேடுவது ஆஸ்திகம். அந்த சொத்து அல்லது செல்வம் நமக்கு உள்ளே இருக்கிறது என்றும் பொருள் கூறலாம். பொதுவாக அழிவற்ற ஆன்மாவை மனதால் அடைய முயற்சிப்பது ஆஸ்திகம். இது ஒரு வகையான முயற்சி. நாஸ்தி என்றால் அழிவு என்று பொருள். இது எந்த மொழி என்று எனக்குத் தெரியாது. ஆனால், சென்னையிலிருக்கும் பொழுது அடிக்கடி கேட்டிருக்கிறேன். எல்லாம் நாஸ்தியாப் போச்சுப்பா என்று அழிந்து போன அல்லது வீணாய்ப்போனதைக் குறித்து அவ்வாறு சொல்வார்கள். கூர்ந்து கவனித்தால் இதில் இரண்டு கருத்துகள் தோன்றுகின்றன. அதாவது என்றும் அழியாத கடவுளை விடுத்து அல்லது மறந்து அல்லது மறுத்து அழியக் கூடிய இந்தப் பிரபஞ்ச பொருட்களைப் பெரிதாகக் கருதிக் கொண்டு செயல்படுவது அல்லது வாழ்வது நாஸ்திகம் எனலாம். இன்னும் ஒரு கருத்து என்னவென்றால் அகம் என்றால் உள்ளே அதாவது உள்ளம் அல்லது மனம் என்று பொருள். மனதை நாஸ்தி செய்து அதாவது மனதை அழித்து என்றும் அழியாத பரம்பொருளை அடைவது நாஸ்திகம். சித்தர்கள் மனதற்ற நிலையைப் பற்றி பேசுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். அதாவது எல்லாமே கடவுள்தான். எனவே இங்கு காணும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு மனதால் தெளிந்து என்றும் அழியாத ஆஸ்தியாகிய பரம்பொருளை அடைவது ஆஸ்திகம். பரம்பொருளை நாம் அடைவதற்குத் தடையாக இருப்பதே இந்தப் பொருள்களும், அவற்றின் மீது கொள்ளும் பற்றுகளே ஆகும். எனவே இந்தஅழியக் கூடிய பொருள் மீது பற்று கொள்ளும் மனதை அழித்து விட்டால் நாம் பரம்பொருளை அடைந்து விடலாம் என்பது நாஸ்திகம். அதாவது அகத்தை அழித்து விடுவது. முன்னது பக்தி, பின்னது யோகம். இரண்டுமே ஞானத்தைத் தந்து முக்தியை அடையச் செய்யும்.

இது பற்றி காஞ்சி மகா பெரியவர் சொல்வது என்னவென்றால், அஸதி என்றால் இருப்பது. ஒரு காலத்திலோ, தேசத்திலோ, ஒரு பொருளிலோ மாத்திரமல்லாமல் எல்லாவற்றிலும் இருக்கிற வஸ்து எதுவோ அதுவே அஸ்தி. அதுவே பரம்பொருள். எனவே ஆஸ்திகன் என்றால் பரம்பொருள் ஞானம் உடையவன் அல்லது பரம்பொருளை நம்புபவன். இதில் நம்பிக்கையற்றவர்கள் நாஸ்திகன். அதாவது பரம்பொருளை மனதால் நம்புபவன் ஆஸ்திகன். பரம்பொருள் மீது நம்பிக்கையற்றவன் நாஸ்திகன். அவர் சொல்வது படிப் பார்த்தால் எந்தப் பொருளுமே இந்த உலகில் அழிவதில்லை. தன் வியக்தியை, தன் குணத்தை, தன் வடிவத்தை இழந்து புதிய நிலையை அடைகிறது. பழைய வியக்தியை அழிந்து போக புதிய வியக்தியை எடுத்துக் கொண்டேயிருக்கிறது. இப்படி பிரபஞ்சச் சக்கரத்தில் உழன்று கொண்டேயிருக்கக் காரணம் மனதில் பரம்பொருள் பற்றிய நம்பிக்கையோ, ஆன்மத் தெளிவோ அற்றிருப்பதுதான். அவனே நாஸ்திகன்.மனதால் பரம்பொருளைப் பற்றி, ஆன்மத் தெளிவாகிய பரஞானம் அடையும் முயற்சியை உடையவன் ஆஸ்திகன். அவனே என்றும் அழியாத சொத்தாகிய நம் சொந்த வீடாகிய வீடு பேற்றை அடைவான் என்பது கருத்து.

எதிர்பார்ப்புகள் எழுகிறது. அது நிகழாத போது ஏமாற்றமே மிஞ்சுகிறது

Photo: நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காகவுமே செலவிடுகிறோம். அதனால் என்ன மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது கூட ஒரு தொண்டுதானே என்று கேட்கக் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்வது என்பது வேறு, அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செயல்படுவது வேறு. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பொழுது உங்கள் மனம் நிறைவடைகிறது. இந்த மனநிறைவு மேலும் உங்கள் ஆற்றலைப் பெருகச் செய்கிறது. ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மற்றவர்கள் முன் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்வதற்காக, மற்றவர்களிடம் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செயல்படும் பொழுது அவர்களுக்கு திருப்பதி ஏற்படுகிறதோ இல்லையோ, உங்களுடைய ஆற்றல் அதிகமாகச் செலவாகிறது. தனக்குள் இயங்க வேண்டிய உணர்வு மையம் மற்றவர்களைச் சார்ந்து நமக்கு வெளியே இயங்க ஆரம்பிக்கிறது. தன்னுணர்வைத் தனக்குள் குவித்து நிலைக்கும் பொழுது சக்தி பெருகும். அது வெளியே புறப் பொருளோடோ, மனிதர்களோடு சார்ந்து இயங்கும் பொழுது சக்தி விரையம் மட்டுமே நிகழும். இதனால்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மனதளவில் பலவீனமாக உணர்கிறார்கள். 

மேலும் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, மற்றவர்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு அவர்கள் மீது எதிர்பார்ப்புகள் எழுகிறது. அது நிகழாத போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது மனதளவில் மிகப் பெரிய சக்தி இழப்பாக மாறிவிடுகிறது. நம் உணர்வு மையம் நமக்குள் இயங்கினால் மட்டுமே தன்னிறைவு என்பது ஏற்படும். நம் செயலை பிறர் பாராட்டும் பொழுது அது மேலும் வினை புரியத் தூண்டி விடுகிறது. பிறர் குறை கூறும் பொழுதோ அது நம் மனதை வெகுவாக பாதித்து செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. உடனே கேட்பீர்கள், செயலற்று இருப்பது நல்லதுதானே ? வினையற்று இருக்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள் ? என்று. செயலற்று இருப்பது என்பது நடைபிணத்திற்கு ஒப்பானதாகும். வினையற்று இருப்பது என்பது வினை உடலளவில் நடைபெற்ற்றாலும் மனதை பற்றாமல் இருப்பது. வினை மனதைப் பற்றாமல் இருக்கின்ற ஒருவருக்கு மற்றவர்கள் பாராட்டினாலும், குறை கூறினாலும் எல்லாமே ஒன்றுதான். எனவே யாருடைய கவனமும் நம் மீது விழ வேண்டும் என்று ஏங்கவும் வேண்டாம். நம் கவனத்தை யார் மீதும் ஆழமாகச் செலுத்தவும் வேண்டாம். 

நமது திருப்திக்காக நாம் வாழ வேண்டும். நமக்கு மனநிறைவு என்பது நாமே உருவாக்கிக் கொள்வதாகும். பிறரிடமிருந்து எதிர்பார்த்தால் நிறைவே ஏற்படாது. எனவே நம் செயல்களிலும், அதன் விளைவுகளிலும், அனுபவங்களிலும் நாம் தன்னிறைவு காணும் விதமாகச் செயல்பட வேண்டும். அதுவே நிறைவான வாழ்வாகும். மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று ஏங்குவதை விடுத்து, அனைவரையும் நேசித்து அன்பு செலுத்தும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை நாமே நேசித்துக் கொள்வதற்கான சுலபமான வழியாகும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்டால், அதற்குப் பிறகு நம் மனம் காரணத்தைத் தேடுவதுமில்லை, மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதுமில்லை.
நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காகவுமே செலவிடுகிறோம். அதனால் என்ன மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது கூட ஒரு தொண்டுதானே என்று கேட்கக் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்வது என்பது வேறு, அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செயல்படுவது வேறு. மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பொழுது உங்கள் மனம் நிறைவடைகிறது. இந்த மனநிறைவு மேலும் உங்கள் ஆற்றலைப் பெருகச் செய்கிறது. ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மற்றவர்கள் முன் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்வதற்காக, மற்றவர்களிடம் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் செயல்படும் பொழுது அவர்களுக்கு திருப்பதி ஏற்படுகிறதோ இல்லையோ, உங்களுடைய ஆற்றல் அதிகமாகச் செலவாகிறது. தனக்குள் இயங்க வேண்டிய உணர்வு மையம் மற்றவர்களைச் சார்ந்து நமக்கு வெளியே இயங்க ஆரம்பிக்கிறது. தன்னுணர்வைத் தனக்குள் குவித்து நிலைக்கும் பொழுது சக்தி பெருகும். அது வெளியே புறப் பொருளோடோ, மனிதர்களோடு சார்ந்து இயங்கும் பொழுது சக்தி விரையம் மட்டுமே நிகழும். இதனால்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மனதளவில் பலவீனமாக உணர்கிறார்கள்.

மேலும் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, மற்றவர்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு அவர்கள் மீது எதிர்பார்ப்புகள் எழுகிறது. அது நிகழாத போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இது மனதளவில் மிகப் பெரிய சக்தி இழப்பாக மாறிவிடுகிறது. நம் உணர்வு மையம் நமக்குள் இயங்கினால் மட்டுமே தன்னிறைவு என்பது ஏற்படும். நம் செயலை பிறர் பாராட்டும் பொழுது அது மேலும் வினை புரியத் தூண்டி விடுகிறது. பிறர் குறை கூறும் பொழுதோ அது நம் மனதை வெகுவாக பாதித்து செயலற்றவனாக ஆக்கி விடுகிறது. உடனே கேட்பீர்கள், செயலற்று இருப்பது நல்லதுதானே ? வினையற்று இருக்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள் ? என்று. செயலற்று இருப்பது என்பது நடைபிணத்திற்கு ஒப்பானதாகும். வினையற்று இருப்பது என்பது வினை உடலளவில் நடைபெற்ற்றாலும் மனதை பற்றாமல் இருப்பது. வினை மனதைப் பற்றாமல் இருக்கின்ற ஒருவருக்கு மற்றவர்கள் பாராட்டினாலும், குறை கூறினாலும் எல்லாமே ஒன்றுதான். எனவே யாருடைய கவனமும் நம் மீது விழ வேண்டும் என்று ஏங்கவும் வேண்டாம். நம் கவனத்தை யார் மீதும் ஆழமாகச் செலுத்தவும் வேண்டாம்.

நமது திருப்திக்காக நாம் வாழ வேண்டும். நமக்கு மனநிறைவு என்பது நாமே உருவாக்கிக் கொள்வதாகும். பிறரிடமிருந்து எதிர்பார்த்தால் நிறைவே ஏற்படாது. எனவே நம் செயல்களிலும், அதன் விளைவுகளிலும், அனுபவங்களிலும் நாம் தன்னிறைவு காணும் விதமாகச் செயல்பட வேண்டும். அதுவே நிறைவான வாழ்வாகும். மற்றவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று ஏங்குவதை விடுத்து, அனைவரையும் நேசித்து அன்பு செலுத்தும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை நாமே நேசித்துக் கொள்வதற்கான சுலபமான வழியாகும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்டால், அதற்குப் பிறகு நம் மனம் காரணத்தைத் தேடுவதுமில்லை, மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படப் போவதுமில்லை.

இதை நான் சொல்லவில்லை, கீதை சொல்கிறது.

Photo: புணர்வும், போக்கும், வரவும் உள்ளவற்றை நிறை பொருள் என்று சொல்வதற்கில்லை. தன்மயமாய் நிறைவாகப் பூரணமாகி நிற்கின்ற வஸ்துவையே பூரணன் என்றழைக்கிறோம். நமக்கு வாழ்வில் திருப்பியே ஏற்படாமல் போவதற்கான காரணம் என்னவென்றால், பிரபஞ்ச வாழ்வென்பது குறைவு உடையதாகும். பிறப்பிலிருந்து இறப்புவரை குறைவை நிறைவு செய்வதே இடைவிடாத பணியாக இருக்கிறது. இந்நிலையையே வாழ்க்கை என்று சொல்கிறோம். நம் உண்மையான இயல்பு பூரணமே என்பதால் இந்தக் குறைவுபட்ட பிரபஞ்ச வாழ்வில் நமக்கு திருப்பதி ஏற்படுவதே இல்லை. இடைவிடாமல் செய்யப்படும் நம் வினைகள் யாவும் பூரணத்தை அதாவது நிறைவை அடைவதாற்காகத்தான். ஆனால், ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும் என்கிற பொழுது குறை என்பது நிரந்தரமாகி விடுகிறது. இதையே போக்கும், வரவும் என்று சொல்கிறார்கள். எனவே பிரபஞ்ச வாழ்வைப் பொருத்த வரை வினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகி விடுகிறது. வினைகளாலேதான் நாம் நிறைவடைய முடியாமல் போகிறது. அது எப்படி என்றால்...  

கடலில் பயணம் செய்கின்ற பாய்மரக் கப்பலின் பாயை அந்த பாயைக் கட்டுவதற்குப் பயன்படும் மூங்கில் கம்புகளே கிழித்து விடுவது போல நம் வினைகளே நம்மை நிறைவடைய விடாமல், கரை சேர விடாமல் செய்கின்றன. குறைவுள்ள மனதினால் புத்தி தெளிவின்மை ஏற்பட்டு விடுகிறது. இந்த புத்தித் தெளிவின்மையால் அஞ்ஞானமாகிய அறியாமை என்கிற குணம் ஏற்பட்டு பிறவியைக் கடைத்தேற்ற முடியாமல் போய் விடுகிறது. இதனால் தான் வினைகளில் உழன்று கொண்டேயிருக்கும் மனிதனை கர்ம சொரூபி என்றும். ஜீவாத்மாவை கர்மசொரூபம் என்றும் மொழிகிறார்கள். கர்மம் என்கிற பதத்தில் உள்ள ''ர்'' என்கிற எழுத்தில் உள்ள புள்ளியை எடுத்து விட்டால் காமம் என்று மாறிவிடுகிறது. அதாவது காமம் என்றால் இச்சை என்பதே உண்மையான பொருள். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு மனதில் தோன்றும் இச்சையே காமம். அந்தக் காமத்தின்  நிமித்தமே கர்மம் நிகழ்கிறது. அதுவே பரம் பொருளின் மீது இச்சை அல்லது காமம் கொள்ளும் பொழுதோ கர்மம் அழிகிறது. கடலில் கலக்கும் நதி தன் வியக்தியை இழந்து விடுவது போல பரம்பொருளில் சேரச் சேர மனம் தன் கர்ம சொரூபத்தை இழந்து கொண்டே வருகிறது. 

பிரபஞ்ச இச்சை அல்லது ஜீவபோதம் இருக்கும் வரை மனிதன் கர்ம சொரூபியாகவே இருக்கிறான். தன் செயல்களுக்குக் கர்த்தா தானே அதாவது நான் என்று எண்ணி வினைகளையும், விளைவுகளையும் வளர்த்துக் கொண்டே செல்கிறான். நிறைய மனிதர்களை, அறிவில் சிறந்தவர்களைக் கூடப் பார்க்கிறோம், பரம்பொருள் மீது நாட்டம் இருந்தாலும் கூட நான் என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகாமல் இருக்கிறது. ஆற்றைக் கடக்க படகில் ஏறியும் கூட அவர்கள் தங்கள் தலைச் சுமைகளை இறக்கி வைக்காமல் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். பரம் பொருளின் நிலையை, ஆற்றலை உண்மையில் உணர்ந்து கொள்வார்களேயானால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பரம்பொருளின் ஆற்றலாலேயே எல்லாம் நிகழ்கிறது என்று உணர்ந்து தங்கள் செயல்களையெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி சுமைகளை இறைவன் கையில் ஒப்படுத்து விட்டு நிம்மதியாக இருப்பார்கள். மனம்தான் எல்லாச் சுமைகளையும் ஏற்றுக் கொண்டு சுமந்து திரிகிறது. இறைவன் திருவடியின் கீழ் சுமைகளை இறக்கி வைத்து விட்டால் மனதிற்கு விடுதலை கிடைத்து விடுகிறது. மனம் நிர்மலமாக ஆகி விடுகிறது. பரம்பொருளோடு கொள்கிற இத்தகைய இணக்கம் வினைத் தூய்மையையும், மனத் தூய்மையையும் அருளுகிறது. களங்கமில்லாதத் தூய மனம் உடையவர்கள் உண்மையை உணர்வதற்கு என்ன தடைதான் இருக்க முடியும் ? இதை நான் சொல்லவில்லை, கீதை சொல்கிறது.
புணர்வும், போக்கும், வரவும் உள்ளவற்றை நிறை பொருள் என்று சொல்வதற்கில்லை. தன்மயமாய் நிறைவாகப் பூரணமாகி நிற்கின்ற வஸ்துவையே பூரணன் என்றழைக்கிறோம். நமக்கு வாழ்வில் திருப்பியே ஏற்படாமல் போவதற்கான காரணம் என்னவென்றால், பிரபஞ்ச வாழ்வென்பது குறைவு உடையதாகும். பிறப்பிலிருந்து இறப்புவரை குறைவை நிறைவு செய்வதே இடைவிடாத பணியாக இருக்கிறது. இந்நிலையையே வாழ்க்கை என்று சொல்கிறோம். நம் உண்மையான இயல்பு பூரணமே என்பதால் இந்தக் குறைவுபட்ட பிரபஞ்ச வாழ்வில் நமக்கு திருப்பதி ஏற்படுவதே இல்லை. இடைவிடாமல் செய்யப்படும் நம் வினைகள் யாவும் பூரணத்தை அதாவது நிறைவை அடைவதாற்காகத்தான். ஆனால், ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும் என்கிற பொழுது குறை என்பது நிரந்தரமாகி விடுகிறது. இதையே போக்கும், வரவும் என்று சொல்கிறார்கள். எனவே பிரபஞ்ச வாழ்வைப் பொருத்த வரை வினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகி விடுகிறது. வினைகளாலேதான் நாம் நிறைவடைய முடியாமல் போகிறது. அது எப்படி என்றால்...

கடலில் பயணம் செய்கின்ற பாய்மரக் கப்பலின் பாயை அந்த பாயைக் கட்டுவதற்குப் பயன்படும் மூங்கில் கம்புகளே கிழித்து விடுவது போல நம் வினைகளே நம்மை நிறைவடைய விடாமல், கரை சேர விடாமல் செய்கின்றன. குறைவுள்ள மனதினால் புத்தி தெளிவின்மை ஏற்பட்டு விடுகிறது. இந்த புத்தித் தெளிவின்மையால் அஞ்ஞானமாகிய அறியாமை என்கிற குணம் ஏற்பட்டு பிறவியைக் கடைத்தேற்ற முடியாமல் போய் விடுகிறது. இதனால் தான் வினைகளில் உழன்று கொண்டேயிருக்கும் மனிதனை கர்ம சொரூபி என்றும். ஜீவாத்மாவை கர்மசொரூபம் என்றும் மொழிகிறார்கள். கர்மம் என்கிற பதத்தில் உள்ள ''ர்'' என்கிற எழுத்தில் உள்ள புள்ளியை எடுத்து விட்டால் காமம் என்று மாறிவிடுகிறது. அதாவது காமம் என்றால் இச்சை என்பதே உண்மையான பொருள். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு மனதில் தோன்றும் இச்சையே காமம். அந்தக் காமத்தின் நிமித்தமே கர்மம் நிகழ்கிறது. அதுவே பரம் பொருளின் மீது இச்சை அல்லது காமம் கொள்ளும் பொழுதோ கர்மம் அழிகிறது. கடலில் கலக்கும் நதி தன் வியக்தியை இழந்து விடுவது போல பரம்பொருளில் சேரச் சேர மனம் தன் கர்ம சொரூபத்தை இழந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்ச இச்சை அல்லது ஜீவபோதம் இருக்கும் வரை மனிதன் கர்ம சொரூபியாகவே இருக்கிறான். தன் செயல்களுக்குக் கர்த்தா தானே அதாவது நான் என்று எண்ணி வினைகளையும், விளைவுகளையும் வளர்த்துக் கொண்டே செல்கிறான். நிறைய மனிதர்களை, அறிவில் சிறந்தவர்களைக் கூடப் பார்க்கிறோம், பரம்பொருள் மீது நாட்டம் இருந்தாலும் கூட நான் என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகாமல் இருக்கிறது. ஆற்றைக் கடக்க படகில் ஏறியும் கூட அவர்கள் தங்கள் தலைச் சுமைகளை இறக்கி வைக்காமல் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறார்கள். பரம் பொருளின் நிலையை, ஆற்றலை உண்மையில் உணர்ந்து கொள்வார்களேயானால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பரம்பொருளின் ஆற்றலாலேயே எல்லாம் நிகழ்கிறது என்று உணர்ந்து தங்கள் செயல்களையெல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி சுமைகளை இறைவன் கையில் ஒப்படுத்து விட்டு நிம்மதியாக இருப்பார்கள். மனம்தான் எல்லாச் சுமைகளையும் ஏற்றுக் கொண்டு சுமந்து திரிகிறது. இறைவன் திருவடியின் கீழ் சுமைகளை இறக்கி வைத்து விட்டால் மனதிற்கு விடுதலை கிடைத்து விடுகிறது. மனம் நிர்மலமாக ஆகி விடுகிறது. பரம்பொருளோடு கொள்கிற இத்தகைய இணக்கம் வினைத் தூய்மையையும், மனத் தூய்மையையும் அருளுகிறது. களங்கமில்லாதத் தூய மனம் உடையவர்கள் உண்மையை உணர்வதற்கு என்ன தடைதான் இருக்க முடியும் ? இதை நான் சொல்லவில்லை, கீதை சொல்கிறது.

Friday, March 28, 2014

சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.

அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.

இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.

இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}
சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.
அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.
இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.