Thursday, April 3, 2014

ஆல்பா தியானம் செய்யும் முறை..


Photo: Lawrence Timer - வணக்கம் சார், எனக்கு ஆல்பா தியானம் செய்யும் முறை பற்றி கூறவும். தியானத்தில் செய்ய வேண்டியதும், செய்ய கூடாதவை என்ன? please give me a answer as a help sir. 

மனித மூளையின் அமைப்பு வலது, இடது என்று இரண்டு நிலைகளில் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இதில் இடது பக்க மூளையானது நம் புலன்களோடு தொடர்புடையது. அது நாம் ஜாக்ரதா நிலையில் இருக்கும் போது அல்லது உணர்வோடு இருக்கும் போது புலன்கள் மூலம் வருகிற தகவல்களை சேகரித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதோடு, அந்நிலையில் எழும் எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது. இடது பக்க மூளையானது மனிதன் விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது. நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற வரை  தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. இந்த வலது பக்க மூளைப் பகுதியே ஆழ்மனம் எனப்படுகிறது. இதை Sub Concious mind என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் இதை இன்னும் நுட்பமாகஆராய்ந்து,  இவை அனைத்தும் இயங்கத் தேவையான நாடி, நரம்புகளின் தொகுப்பை தன்னிச்சை, நரம்பு மண்டலம், அனிச்சை நரம்பு மண்டலம் என்று அடையாளப்படுத்துகிறார்கள். 

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக ஞானிகளும், விஞ்ஞானிகளும் கூறியிருக்கிறார்கள். எண்ணம் உதயமாகும் பொழுது எழுகின்ற அலைச் சுற்றுகளை வைத்து இது கணக்கிடப் படுகின்றது. ஆல்பா அலை எழும் பொழுது மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec), பீட்டாவில் 13 சுற்றுகளுக்கு அதிகமாகவும், தீட்டா நிலையில் 4 லிருந்து 7 சுற்றுகள் வரையும், டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் குறைவாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதில் பீட்டா நிலை என்பது விழிப்பு நிலையாகும். மனம் வேகமாக இயங்கும் நிலை
ஆல்பா நிலை. இது விழிப்பிற்கும், உறக்கத்திற்கும் இடைப்பட்ட தூங்காமல் தூங்கும் தியான நிலை. இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. டெல்டா என்பது சமாதி நிலை. நம் ஜாக்ரதை அவத்தையின் போது புலன்கள் இயங்கிக் கொண்டே இருப்பதால் நினைவு மனம் விழிப்பு நிலையிலும், ஆழ்மனம் உறக்க நிலையிலும் இருக்கிறது.

இப்படி உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனதை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் இயக்கங்களைக் குறைக்க வேண்டும். நம் புலன்கள் மூலம் நிகழும் புற உலக இயக்கங்களைத் துண்டித்தால் நினைவு மனத்தின் செயல்பாடுகள் குறையும். நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதை எளிமையாக சொன்னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலைதான் இது. அது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகின்து. இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

மனிதனுக்கு பலவிதமான தடைகள் ஏற்படும் பொழுதும், தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் பொழுதும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறையும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை தியானம் தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. இதையே  நீங்கள் ஒவ்வொரு மூச்சையும் உங்கள் பணிகளுக்கிடையில் கவனித்து நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடப் பழகிக் கொண்டீர்களானால் அதன் பலன் அளவிடற்கரியது. தியானம் வேறு ஆல்பா தியானம் வேறு அல்ல. பல படித்தரங்கள், பல அனுபவங்கள் என்று தியானத்தை நோக்கிய பயணத்தின் அனுபவங்களை வைத்து பலவேறு பெயர்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டுள்ளீர்கள். மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். என்ன செய்யக் கூடாது என்று கேட்டால் முயற்சியைக் கைவிடக் கூடாது அவ்வளவுதான். எனவே விழிப்பு நிலைக்கு மனதைக் கொண்டு செல்வதின் ஆங்கிலப் பெயரே ஆல்பா தியானம்.
மனித மூளையின் அமைப்பு வலது, இடது என்று இரண்டு நிலைகளில் இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இதில் இடது பக்க மூளையானது நம் புலன்களோடு தொடர்புடையது. அது நாம் ஜாக்ரதா நிலையில் இருக்கும் போது அல்லது உணர்வோடு இருக்கும் போது புலன்கள் மூலம் வருகிற தகவல்களை சேகரித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதோடு, அந்நிலையில் எழும் எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது. இடது பக்க மூளையானது மனிதன் விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது. நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற வரை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. இந்த வலது பக்க மூளைப் பகுதியே ஆழ்மனம் எனப்படுகிறது. இதை Sub Concious mind என்று சொல்வார்கள். நம் முன்னோர்கள் இதை இன்னும் நுட்பமாகஆராய்ந்து, இவை அனைத்தும் இயங்கத் தேவையான நாடி, நரம்புகளின் தொகுப்பை தன்னிச்சை, நரம்பு மண்டலம், அனிச்சை நரம்பு மண்டலம் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக ஞானிகளும், விஞ்ஞானிகளும் கூறியிருக்கிறார்கள். எண்ணம் உதயமாகும் பொழுது எழுகின்ற அலைச் சுற்றுகளை வைத்து இது கணக்கிடப் படுகின்றது. ஆல்பா அலை எழும் பொழுது மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec), பீட்டாவில் 13 சுற்றுகளுக்கு அதிகமாகவும், தீட்டா நிலையில் 4 லிருந்து 7 சுற்றுகள் வரையும், டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் குறைவாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதில் பீட்டா நிலை என்பது விழிப்பு நிலையாகும். மனம் வேகமாக இயங்கும் நிலை
ஆல்பா நிலை. இது விழிப்பிற்கும், உறக்கத்திற்கும் இடைப்பட்ட தூங்காமல் தூங்கும் தியான நிலை. இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. டெல்டா என்பது சமாதி நிலை. நம் ஜாக்ரதை அவத்தையின் போது புலன்கள் இயங்கிக் கொண்டே இருப்பதால் நினைவு மனம் விழிப்பு நிலையிலும், ஆழ்மனம் உறக்க நிலையிலும் இருக்கிறது.

இப்படி உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனதை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் இயக்கங்களைக் குறைக்க வேண்டும். நம் புலன்கள் மூலம் நிகழும் புற உலக இயக்கங்களைத் துண்டித்தால் நினைவு மனத்தின் செயல்பாடுகள் குறையும். நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதை எளிமையாக சொன்னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலைதான் இது. அது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகின்து. இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

மனிதனுக்கு பலவிதமான தடைகள் ஏற்படும் பொழுதும், தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் பொழுதும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறையும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை தியானம் தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. இதையே நீங்கள் ஒவ்வொரு மூச்சையும் உங்கள் பணிகளுக்கிடையில் கவனித்து நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடப் பழகிக் கொண்டீர்களானால் அதன் பலன் அளவிடற்கரியது. தியானம் வேறு ஆல்பா தியானம் வேறு அல்ல. பல படித்தரங்கள், பல அனுபவங்கள் என்று தியானத்தை நோக்கிய பயணத்தின் அனுபவங்களை வைத்து பலவேறு பெயர்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்டுள்ளீர்கள். மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். என்ன செய்யக் கூடாது என்று கேட்டால் முயற்சியைக் கைவிடக் கூடாது அவ்வளவுதான். எனவே விழிப்பு நிலைக்கு மனதைக் கொண்டு செல்வதின் ஆங்கிலப் பெயரே ஆல்பா தியானம்.

No comments:

Post a Comment